சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஒரே செல்லில் 2 சிம்".. ஒரே ஏரியாவில் 2 மனைவி.. தவித்த ரஷீத்.. கத்திக்குத்தில் முடிந்த சண்டை!

ஒரு செல்போனில் 2 சிம் போடலாம். ஓரே ஏரியாவில் இரண்டு மனைவிகளை தனித்தனியாக குடிவைத்த ரஷீத் வாழ்க்கையில் தினமும்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு செல்லுக்கு 2 சிம் போட்டாவே சிக்கல் இருக்கிறப்ப ரெட்ஹில்ஸ்ல 2 பொண்டாட்டி கட்டுன ரஷீத் பாடு எப்படியிருக்கும். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடிபோல ரஷீத் வாழ்க்கையில் தினம் தினம் அடிதடிதான்.

முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து அந்த 2 பேரையும் ஒரே ஏரியாவில் குடி வைத்த ரஷீத் வாழ்க்கையில் தினம் தினம் சூறாவளிதான்.

புயல் கரையை கடந்தது போல முதல் மனைவியின் கோபத்திற்கு ஆளான இரண்டாவது மனைவி கத்துக்குத்து பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல் மனைவி சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.

கொலையில் முடிந்த குடும்பத்தகராறு - மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது கொலையில் முடிந்த குடும்பத்தகராறு - மனைவியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது

செங்குன்றத்தில் சம்பவம்

செங்குன்றத்தில் சம்பவம்

செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்த முகமது ரஷீத், இறைச்சிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுராகாத்தூன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக போய் கொண்டிருந்த நிலையில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஜூனைரா பேகம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

ஜூனைரா பேகம் முகம்மது ரஷீத்தின் உறவுக்கார பெண் ஆவார். நாளடைவில் இந்த விசயம் சுராகாத்தூனுக்கு தெரியவே குளிர்விட்டுப்போனது ரஷீத்திற்கு. செங்குன்றம் பகுதியிலேயே இரண்டாவது மனைவியையும் குடி வைத்தார். பின்னர்தான் சிக்கல் தொடங்கியது.

கத்திக்குத்து

கத்திக்குத்து

தினசரியும் சண்டை சச்சரவுதான். இரண்டு மனைவிகளும் மாறி மாறி சண்டை போட்டு தலைவலியை ஏற்படுத்தினர். நேற்றும் இதே போல சண்டை தொடங்கியது. ஒருவரை ஒருவர் திட்டி சண்டை போட்டுக்கொண்டு இருந்த நிலையில் வீட்டிற்குள் போய் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்த சுராகாத்துன் தன்னை திட்டிக்கொண்டிருந்த ஜூனைரா பேகத்தின் முகத்தில் குத்தி கிழித்தார். இதில் ரத்தகாயமடைந்த ஜூனைனா மயக்கமானார்.

சிறை கம்பிகளுக்குப் பின்னால்

சிறை கம்பிகளுக்குப் பின்னால்

அக்கம் பக்கத்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்தனர். ஜூனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திய சுரா காத்துன் இப்போது கம்பிக்கு பின்னே அழுது கொண்டிருக்கிறார். ஆண் செய்த தவறினால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளும் சிறைக்குப் போன அம்மாவை நினைத்து அழுது கொண்டிருக்கின்றனர்.

English summary
Chennai Red hills police arrested a woman on sunday on stabbing her husband's second wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X