பிளஸ் டூ மாணவனுக்கு பாலியல் தொல்லை.. கம்ப்யூட்டர் டீச்சர் மீது போலீஸ் வழக்கு.. சென்னையில் கொடுமை
சென்னை: பிளஸ் டூ மாணவனை பாலியல் ரீதியாக தொல்லைக்கு உட்படுத்தி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், மேற்கு முகப்பேரில் உள்ள பிரபல பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பள்ளியில், கம்ப்யூட்டர் ஆசிரியையாக பணியாற்றிய 40 வயதான ஸ்மிதா என்பவர், பள்ளியிலேயே தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அடங்காத, கம்ப்யூட்டர் ஆசிரியை ஸ்மிதா, மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, மாணவனின் பெற்றோர், நொளம்பூர் காவல் நிலையத்தில், கம்ப்யூட்டர் ஆசிரியை ஸ்மிதா மீது புகார் அளித்தனர். தற்போது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.