சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ: சென்னை தாக்குதலை கண்டித்து மதுரை, தஞ்சை, நெல்லையில் போராட்டம்- பெண்கள் பெருந்திரள் பங்கேற்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை: சி.ஏ.ஏ. வுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று 3-வது நாளாக கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.

    சென்னை வண்ணாரபேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு நீடித்த நிலையில் போலீசார் தடியடி நடத்தினர்.

    Women continue Protest against CAA across Tamil Nadu

    போலீசாரின் இக்கொடூர தாக்குதலைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றும் 3-வது நாளாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

    மத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்மத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்

    மதுரை, தஞ்சை, நெல்லை, ஓசூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பெண்கள் பெருந்திரளாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

    கூத்தாநல்லூரில் 2-வது நாளாக போராட்டம்

    இதேபோல் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இன்று இரவும் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை.

    English summary
    Women continue their Protest against CAA across Tamil Nadu on Sunday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X