சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தடையை மீறி பழவேற்காட்டில் படகுசவாரி செய்த போது விபத்து.. பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Google Oneindia Tamil News

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் தடையை மீறி படகுசவாரி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காட்டில் படகுகளில் பொதுமக்களை எந்தவித பாதுகாப்பும் இன்றி சவாரி அழைத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து படகுசவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

women died in palaverkadu lake boat accident

இந்நிலையில் தடையை மீறி பழவேற்காட்டில் பொதுமக்களை ஏரியில் படகு சவாரி அழைத்துச் செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தடையை மீறி இரண்டு படகுகளில் பொதுமக்கள் சவாரி அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு படகில் 16 பேர் சவாரி சென்றுள்ளனர். அந்த படகின் மீது மற்றொரு படகு எதிர்பாராதவிதமாக உரசியது. இதில் மேரி என்ற பெண் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

 சிறுபான்மையினர் பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு... ஓ பன்னீர்செல்வம் பெருமிதம் சிறுபான்மையினர் பாதுகாப்புடன் வாழும் ஒரே மாநிலம் தமிழ்நாடு... ஓ பன்னீர்செல்வம் பெருமிதம்

இந்த சம்பவம் காரணமாக பழவேற்காட்டில் சோகமான சூழல் காணப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
women died in palaverkadu boat accident after Boat trip despite ban at thiruvallur district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X