விபரீதங்கள் இங்கே விற்கப்படும்.. புதிய வரலாறு படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்
சென்னை: இந்த ஆன்லைன் யுகத்திலும் எழுத்தில் புதிய வரலாறு படைக்க முடியும் என்பதை கிரைம் கதை மன்னர் ஆர்.ராஜேஷ்குமார் நிரூபித்துள்ளார்.
ராஜேஷ் குமார் நாவல்களுக்கும், அவரது கதைகளுக்கும் அடிமையாகதவர் யார்தான் இருக்க முடியும். சாதாரண சிறு கதை முதல் நெடுங்கதை வரை ராஜேஷ் குமார் தொடாத உச்சம் கிடையாது.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய எழுத்தாளர் தொடர்ந்து நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு தொடர்களை எழுதி வருவது நமது வாசகர்கள் செய்த புண்ணியம்தான். ராஜேஷ் குமாரின் கைவண்ணத்தில் சமீபத்தில் முடிவடைந்த தொடர்தான் விபரீதங்கள் இங்கே விற்கப்படும். 70 அத்தியாயங்கள் வரை நீண்ட இந்தத் தொடர் பெரும் விறுவிறுப்புடன் தொடங்கி , வளர்ந்து, முடிந்து வாசகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
இந்தத் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் ராஜேஷ் குமார். வழக்கமாக கதைகளுக்கு அவர் அதிக எபிசோடுகளை ஒரு தொடருக்கு எழுதுவதில்லை. ஆனால் நமக்காக எழுதிய விபரீதங்கள் இங்கே விற்கப்படும் தொடருக்கு மட்டும்தான் அதிகபட்ச எபிசோடுகளை எழுதியுள்ளார். அந்த வகையில் நமது ஒன்இந்தியா தமிழ் இணையதளமும் பெருமைப்படும் வகையிலான ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தத் தொடருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புதான் அவரை இத்தனை எபிசோடுகள் வரை எழுதத் தூண்டியதாக பெருமையுடன் சொல்லும் எழுத்தாளர் ராஜேஷ் குமார், நமது வாசகர்களுக்கு தனது அன்பையும் , நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரை மீண்டும் படிக்க விரும்புவோருக்கும்.. புதிதாக படிக்க வருவோருக்கும் வசதியாக.. அந்தத் தொடர் மொத்தமாக இங்கே.. வாங்க படிங்க.. மகிழுங்க
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70]