பைக் ஓட்டணும்னு ஆசையா இருக்கு.. நொடியில் நடந்த கொடுமை.. பரிதாபமாக உயிரை விட்ட குன்றத்தூர் அபிநயா!
பைக் விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
Recommended Video
சென்னை: "பைக் ஓட்ட கத்து தர்றியா, ஆசையா இருக்கு" என்று ஆசையாக கேட்ட அபிநயா.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரோட்டோரம் உள்ள தடுப்பு சுவற்றில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் அருகே பைக் விபத்தில் ஒரு பெண் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்ததில், இளம்பெண், முகம், கை, கால்களில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவருக்கு பக்கத்திலேயே இன்னொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
துரைமுருகன் மகனுக்கு அடித்த ஜாக்பாட்... சென்னை கோட்டத்தில் முக்கிய பதவி
விசாரணை
இதையடுத்து இளைஞரை மீட்ட போலீசார் குரோம்பேட்டையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அதில், படுகாயமடைந்தவர் பெயர் அண்ணாமலை, வயசு 21 என்பது தெரியவந்தது. உயிரிழந்த பெண்ணின் பெயர் அபிநயா, வயசு 20 என்பதும் தெரியவந்தது.
அபிநயா
அபிநயா, காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில் கொஞ்ச நாளாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுதான் அண்ணாமலையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வேலையை விட்டு அபிநயா நின்றுவிட்டார். இதனால் சம்பள பாக்கியை வாங்கி வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார்.
பைக்
பிறகு குன்றத்தூரில் பைக்குடன் காத்திருந்த அண்ணாமலையுடன் ஷோரூமுக்கு புறப்பட்டு சென்றார் அபிநயா. வழியில், "பைக் ஓட்ட கற்று தர்றியா, ஆசையா இருக்கு" என்று அண்ணாமலையிடம் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலையும் சரி என்று சொல்லி, பைக்கை ஓட்ட சொல்லி அபிநயாவிடம் தந்துவிட்டு, பின்னாடி உட்கார்ந்து கொண்டார்.
பரிதாப பலி
ஆனால் அபிநயா எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரோட்டோரம் இருந்த தடுப்பு சுவரில் உள்ள கம்பியில் போய் பலமாக மோதிவிட்டார். இதில் அவரது முகம், கை, கால்கள், கழுத்தில் கம்பி குத்தி கிழித்து ரத்தம் கொட்டியது. சில நிமிடங்களிலேயே அதே இடத்தில் அபிநயா பரிதாபமாக உயிரிழக்க, அண்ணாமலை காயங்களுடன் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.