தூக்கி வீசப்பட்ட 22 வயது மடோனா.. டூவீலரில் சென்றபோது எமனாக வந்த லாரி.. சென்னையில் சோகம்!
டூவீலர் மீது லாரி மோதி இளம்பெண் பலியானார்
சென்னை: லாரி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டார் மடோனா.. மார்பு, இடுப்பு பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு.. பரிதாபமாக உயிரிழந்தார்!
சென்னை வேளச்சேரி அருகே டூவீலரில் ஒரு இளம்பெண் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அந்த வழியாக திடீரென ஒரு லாரி வேகமாக வந்தது.. எதிர்பாராத விதமாக பெண்ணின் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் பெண்ணிற்கு மார்பு, இடுப்பு, வயிறு, தலையில் படுகாயம் ஏற்பட்டது.. கண் முன்னிலையிலேயே அந்த பெண் தூக்கி எறியப்பட்டு, கீழே விழுந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. ஆனால், தீவிரமான சிகிச்சை அளித்தும் இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. உயிரிழந்த பெண் ஆலந்தூரை சேர்ந்தவர், பெயர் ஷெர்லி மடோனா, வயது 22 என்பது தெரியவந்துள்ளது.
ஆனால், விபத்தை ஏற்படுத்திய லாரி பற்றின எந்த அடையாளமும் தெரியவில்லை என்பதால், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து லாரியையும், அந்த டிரைவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.