சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகலை.. அடித்து கொன்று.. தூக்கில் தொங்க விட்ட.. கொடூர கணவர்

திருமணம் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்யாணமாகி அடித்து கொன்று.. தூக்கில் தொங்க விட்ட.. கொடூர கணவர்

    சென்னை: மனிஷாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்கூட ஆகல.. அதற்குள் அடித்து கொன்று தூக்கில் பிணமாக தொங்கவிட்டு விட்டார் அவரது கணவர்!

    சென்னை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அபின்ராஜ். இவர் மினி வேன் டிரைவராக வேலை பார்க்கிறார். மனிஷா என்ற பெண்ணை 5 வருஷமாக காதலித்தார். ஒரு வருடத்துக்கு முன்பு, கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, அவரது வீட்டில் இருந்து அழைத்து கொண்டு போய், தன்னுடைய சொந்தக்காரர் வீட்டில் தங்க வைத்துவிட்டார் அபின்ராஜ்.

    காதலனை நம்பி வந்துவிட்ட நிலையில் திரும்பவும் வீட்டுக்கு போக முடியாத சூழல் மனிஷாவுக்கு ஏற்பட்டது. மேலும் கல்யாணம் செய்து கொள்ளாமல் நாட்கள் கடத்திய நிலையில், இருவருக்குள்ளும் நிறைய பிரச்சனைகள், தகராறுகளும் வந்துபோயின.

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. இன்று ஆசிரியர் தினம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்துஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. இன்று ஆசிரியர் தினம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

    அபின்ராஜ்

    அபின்ராஜ்

    இந்நிலையில், 6 மாசத்துக்கு முன்பு, மனிஷா கர்ப்பமானார். இதனால் உறவினர் வீட்டில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், தனியாக வீடு எடுத்து இருவரும் தங்கினர். ஆனால் அப்போதும் அபின்ராஜ் மனிஷாவை கல்யாணம் செய்து கொள்ளவில்லை, சண்டையும் ஓயவில்லை. ஒருநாள் ஏற்பட்ட சண்டையில் மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் ஓங்கி குத்தியதால், கர்ப்பமே கலைந்து, ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.

    மனிஷா

    மனிஷா

    இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அபின்ராஜ், தாய் ராணிதங்கம், தந்தை ஏசுராஜ் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெசன்ட்நகரில் மனிஷாவை கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்து 7நாள் கழித்து மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என மனிஷாவின் அப்பாவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

    தாலி பிச்சை

    தாலி பிச்சை

    மகள் இப்படி அநியாயமாக தற்கொலை செய்து கொண்டாரே என்று நினைத்து இறுதி சடங்கும் செய்து முடித்தார். அதன்பிறகுதான், மனிஷாவின் செல்போனை பார்த்தபோது அதில் ஷாக் ஆடியோ ஒன்று இருந்தது. அந்த ஆடியோவில், அபின் ராஜுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருந்ததும், அந்தப் பெண்ணிடம் மனிஷா தாலி பிச்சை கேட்டு அழுததும், ஏற்கனவே கர்ப்பம் கலைந்தது குறித்தும் பேசியது கேட்டு அதிர்ந்து போனார்.

    கைது

    கைது

    இப்படிப்பட்டவன் தன் மகளை கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு, பல்லாவரம் போலீசில் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை இல்லை என்றதும், 50 பேர் ஆதரவுடன், துணை கமிஷனர் ஆபீசுக்கு சென்று மனிஷாவின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்று புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் அபின் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மனிஷா எப்படி இறந்தார், ஏன் கொன்றார், என்றெல்லாம் போலீசாரின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

    English summary
    Woman killed by husband due to family issue in Tirisoolam near Chennai and Police investigation is going it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X