சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கும்மிருட்டு.. போதையில் மாணவி.. காட்டுக்குள் இழுத்து சென்று நாசம் செய்த போலி போலீஸ்.. அதிரடி கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவியை காட்டுக்குள் இழுத்து சென்று நாசம் செய்த போலி போலீஸ்- வீடியோ

    சென்னை: காதலனுடன் போதையில் இருந்த மாணவியை, போலீஸ் என்று கூறி காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி துவாக்குடியில் செயல்பட்டு வருகிறது என்ஐடி பொறியியல் காலேஜ். இங்கு தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்காக காலேஜ் கேம்பஸில் ஒரு ஹாஸ்டலும் உள்ளது.

    இந்த காலேஜில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 3-ம் வருஷம் படித்து வருகிறார். அதற்காக ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவர் சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்தும் வந்துள்ளார்.

    என் புருஷனுக்கும் என் அம்மாவுக்கும் கள்ள உறவு.. அதனால எனக்கு இளைஞனோட உறவு.. அதிர வைத்த டீச்சர்!

    காதலன்

    காதலன்

    இந்நிலையில், கடந்த 1ம் தேதி ஹாஸ்டலில் அனுமதி இல்லாமல் கிளம்பி சென்று காதலனுடன் ஊர் சுற்றி உள்ளார் மாணவி. 2 நாட்களாக காலேஜும் போகவில்லை, ஹாஸ்டலும் போகவில்லை. ஊரெல்லாம் சுற்றிவிட்டு, காலேஜ் அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் காதலனுடன் உட்கார்ந்திருந்தார்.

    நள்ளிரவு

    நள்ளிரவு

    நடுராத்திரி நேரம் என்பதால் சில்மிஷத்தில் இருவரும் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞர் வந்தார். இருவரையும் கவனித்தார். இருவருமே கஞ்சா அடித்த போதையில் தங்களை மறந்து இருந்ததை கவனித்தார். இதையடுத்து அந்த நபர் இருவரிடமும் பேச்சு கொடுத்தால் உளறி இருக்கிறார்கள்.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    உடனே வந்த அந்தநபர், "நான் போலீஸ்... யார் நீங்க.. இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க" என்று கேட்டு, காதலனை சரமாரியாக தாக்கவும், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்னர், மாணவியிடம், ஹாஸ்டலில் விட்டுவிடுகிறேன் என்று சொல்லி காலேஜில் உள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்து சென்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பிறகு அங்கிருந்து தப்பி சென்றும்விட்டார்.

    இளைஞர்

    இளைஞர்

    மறுநாள் காலை, அந்த மாணவி துவாக்குடி போலீசில் புகார் செய்து, அந்த நபரின் அடையாளங்களையும் சொன்னார். உடனே போலீசார் காலேஜ் கேம்பஸில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலி போலீஸ் என்ற சொன்ன அந்த இளைஞரை பிடித்து விட்டனர்.

    ஜெயில்

    ஜெயில்

    விசாரணையில், அவர் திருவெறும்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பதும், வயசு 30 என்பதும் தெரியவந்தது. பல கேஸ்களில் நிறைய முறை ஜெயிலுக்கு போனவர்தான் இந்த மணிகண்டன் என்பதையும் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    English summary
    In Trichy, Young man arrested for sexual harassment to Engineering College student issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X