சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை!

மகளை ஏமாற்றிய இளைஞரை அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய நபர் கைது-வீடியோ

    சென்னை: மகளுடன் 3 மாசம் பழகி, குடித்தனமும் நடத்திவிட்டு, கடைசியில் ஏமாற்ற முயன்ற இளைஞரை தாறுமாறாக அரிவாளால் வெட்டிவிட்டார் சக்திவேல்!

    அம்பத்தூரில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மூத்த மகள் சத்யபிரியா சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர். வயசு 23 ஆகிறது.

    இவருக்கு ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. லாரன்ஸ் அம்பத்தூரில் உள்ள ரெயில்வே ஸ்டே‌ஷன் சாலையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஏற்பட்ட பழக்கம் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் ரெண்டு பேரும் நெருக்கமாக பழகி வந்தாகவும் கூறப்படுகிறது.

    தனி வீடு

    தனி வீடு

    சக்திபிரியா லாரன்சுடன் பழகுவதை அறிந்த அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    சண்டை

    சண்டை

    ஆனால் கடந்த ஒரு மாதமாக காதலர்களுக்கு சண்டை வந்து, பிரிந்து உள்ளார்கள். சத்யபிரியா பெற்றோருடன் வந்து சேர்ந்துவிட்டார். லாரன்ஸ் கடைக்கு தனது மகளுடன் சென்ற சக்திவேல், சேர்ந்து வாழும்படி கூறியுள்ளார். இதற்கு லாரன்ஸ் மறுப்பு தெரிவிக்கவும், ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    சரமாரி வெட்டு

    சரமாரி வெட்டு

    ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாரன்சை சரமாரியாக வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த சிலர் லாரன்ஸை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சத்யபிரியாவின் அப்பா சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    அப்போது, "ஃபேஸ்புக் மூலமாக பழகி என் பொண்ணை ஏமாத்திட்டான், 3 மாசம் கல்யாணமே பண்ணிக்காமல் குடும்பம் நடத்திட்டு, இப்போ சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்றான்.. அதனால்தான் வெட்டினேன்" என்று போலீசாரிடம் சொல்லி உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லாரன்சுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Young man attacked by his lovers father in Ambattur near Chennai and father arrested
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X