சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்யாணம் பண்ண இஷ்டமில்லை.. மறுத்த காதலி.. கழுத்தை அறித்த காதலன்.. தற்கொலைக்கும் முயற்சி!

காதலியின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு காதலன் முயன்றார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமணம் செய்ய மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து-வீடியோ

    திருவொற்றியூர்: கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்று சொன்ன காதலியின் கழுத்தை இளைஞர் கழுத்தாலேயே அறுத்துவிட்டார். அதோடு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்தவர் பாரதி. 25 வயதாகும் பாரதி, டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளார். ஆனால் அதற்கான வேலை கிடைக்காமல், புதுவண்ணாரப்பேட்டையில் டூ-வீலர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது கடைக்கு அடிக்கடி பாலாஜி என்பவர் வந்து போவார். அவர் அந்த கடையில் தனக்கு பைக் வாங்க வந்தபோதுதான் பாரதிக்கு ரொம்ப நெருக்கமாகி விட்டது. ரெண்டு பேரும் லவ் பண்ணார்கள். ஆனால் வரவர பாலாஜியின் நடவடிக்கைகள் பாரதிக்கு பிடிக்கவே இல்லை.

     வீட்டுக்கு சென்றார்

    வீட்டுக்கு சென்றார்

    அதனால் பேசுவதை குறைக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி பலமுறை பாரதியிடம் பேச முயன்றும், அவர் பிடி கொடுத்து பேசவே இல்லை. அதனால் ரெண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும் என்று நினைத்து நேற்றிரவு பாலாஜி பாரதியின் வீட்டுக்கே சென்றுவிட்டார்.

     கழுத்தை அறுத்தார்

    கழுத்தை அறுத்தார்

    அந்தநேரம் பார்த்து வீட்டில் எல்லோரும் வெளியே போய் இருந்தார்கள். தனியாக இருந்த பாரதியிடம் தகராறு செய்தார். அப்போதும் பாரதி கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்லை. இதனால் பாரதியின் வீட்டு கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து பாரதியின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டார்.

     தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தால், ரத்த வெள்ளத்தில் இதில் ரத்த வெள்ளத்தில் பாரதி போராடி கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள்.

     விஷம் குடித்தார்

    விஷம் குடித்தார்

    இதனிடையே, வீடு புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து தப்பி வந்த பாலாஜி, நேராக ஒயின் ஷாப்புக்கு போனார். சரக்கு வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்துவிட்டார். பிறகு நடுரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்ட திருவொற்றியூர் போலீசார் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     கைது நடவடிக்கை

    கைது நடவடிக்கை

    இப்போது பாரதிக்கு ஸ்டேன்லி அரசு ஆஸ்பத்திரியிலும், பாலாஜிக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவருக்கு உடல்நிலை சரியான பின்பு கைது செய்ய காத்திருக்கிறார்கள்.

    English summary
    Young Man attacked girl friend and attempt suicide in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X