"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே".. பிடித்து நிறுத்தியபோது.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்!
ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
சென்னை: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே" என்று கேட்ட போலீசார் பிறகுதான் விஷயத்தை அறிந்து ஷாக் ஆனார்கள்.
நேற்று ராத்திரி 2.30 மணி இருக்கும். வேளச்சேரி 100 அடி ரோட்டில் வழக்கமாக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் ஒரு பெண் பர்தா போட்டு கொண்டு நின்றிருந்தார். கையில் ஒரு ஹெல்மட்டும் வைத்திருந்தார்.
அலறி ஓடினார்
இதை பார்த்த போலீசார், இந்த நடுராத்திரி இங்கு ஏன் பெண் நிற்க வேண்டும், என்ன, ஏதென்று விசாரிக்கலாம் என்று அருகில் சென்றனர். ஆனால் போலீசை பார்த்ததும் அந்த பெண் அலறி அடித்து ஓடினார். இதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது.
ஓட்டம்
அதிலும் அந்த பெண் ஓடிய ஸ்டைலை பார்த்ததும் சந்தேகம் மேலும் குழப்பமானது. ஓடற ஓட்டத்தை பார்த்தால், பொண்ணு மாதிரி தெரியலையே என்று நினைத்து பின்னாடியே துரத்தி கொண்டு ஓடினார்கள். கடைசியில் விரட்டி பிடித்து, பெண்ணின் பர்தாவையும் விலக்கி பார்த்தார்கள். அப்போதுதான் அவர் இளைஞர் என்று தெரியவந்தது.
வெல்டிங் மிஷின்
கையில் வெல்டிங் மிஷின் வைத்திருந்தார். அதாவது ஏடிஎம்மை கொள்ளையடிக்க வந்த விஷயம் பிறகுதான் தெரிந்தது. உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இளைஞர் பெயர் ராஜ்குமார், வயசு 24, வேளச்சேரி காந்தி ரோடில் வெல்டிங் கடை வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணை
ராஜ்குமாருக்கு நிறைய கடன் இருக்கிறதாம், எப்படி கடனை அடைக்கிறதுன்னு தெரியாமல், ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்தாராம். அதற்காக தன்னுடைய கடையில் இருந்தே வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் என எல்லாவற்றையும் கொண்டு வந்துள்ளார். இப்படி கொள்ளை அடிக்கிறது ராஜ்குமாருக்கு இதுதான் முதல்முறையாம். அதனால்தான் பர்தா போட்டு வந்ததாக சொல்கிறார். இதையடுத்து ராஜ்குமாரிடம் விசாரணை நடக்கிறது.