சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நள்ளிரவு 2 மணிக்கு வந்தார்.. அதிகாலையில் சுவர் குதித்து ஓடினார்.. விஷால் மீது பரபர புகார்!

நடிகர் விஷால் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நடிகர் விஷால் மீது பெண்மணி பரபரப்பு புகார்!

    சென்னை: "நடுராத்திரி 2 மணிக்கு வந்துட்டு, விடிகாலை 4 மணிக்கு பின்பக்கமா சுவர் ஏறி குதித்து ஓடிவிட்டார்" விஷால் என்று ஒரு பெண் பரபரப்பான குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

    மீடூவை கிளப்பி விட்ட சின்மயி ஓய்ந்துவிட்டாலும் மீடூ இன்னும் ஓயவில்லை. வைரமுத்து, அர்ஜுன், ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுசிகணேசன், ஏ.ஆர்.முருகதாஸ் என மீடூ படர்ந்தது. வைரமுத்து மீது குற்றச்சாட்டு எழும்போதே, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிரச்சனை குறித்து பேசினார்.

    இது சம்பந்தமாக செய்தியாளர்களிடமும், பெண் கலைஞர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில் பாதுகாப்பு குழு அமைக்கப்படும் என்று உறுதி தந்து அதற்கான உத்தரவும் பிறப்பித்தார். ஆனால் விஷால் மீதே பாலியல் புகார் இப்போது கிளம்பியுள்ளது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சுவர் ஏறி குதித்து ஓடினார்

    சுவர் ஏறி குதித்து ஓடினார்

    விஸ்வதர்ஷினி என்பதுதான் அந்த பெண்ணின் பெயர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "கோபாலபுரத்தில் ஒரு அபார்ட்மெண்ட்டில் 4-வது மாடிக்கு நடுராத்திரி 2 மணிக்கு விஷால் வந்துவிட்டு, பிறகு பின்வாசல் வழியாக அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து ஓடினார். பின்வாசல் வழியாக விஷால் ஓடியது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஆட்டம் போட்டவர் விஷால்

    ஆட்டம் போட்டவர் விஷால்

    அது மட்டும் இல்லாமல் விஷால் செய்த அட்டகாசங்கள் நிறைய உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. சிசிஎல் கிரிக்கெட் போட்டியின்போது அவர் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார் என்பதற்கான ஆதாரமும் என்னிடம் இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.

    காழ்ப்புணர்ச்சியா?

    காழ்ப்புணர்ச்சியா?

    விஷால் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டை திரையுலகம் உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்கவே இல்லை. இந்த குற்றச்சாட்டுக்கு விஷால் ஏதாவது பதில் சொல்லப் போகிறாரா? அல்லது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர போகிறரா? அல்லது விஷால் மீது வேறு யாரேனும் காழ்ப்புணர்ச்சியால் இந்த புகார் கிளப்பி விடப்பட்டுள்ளதா? என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.

    இது முதல்முறை இல்லை

    இது முதல்முறை இல்லை

    இந்தப் பெண் இதுபோல சர்ச்சையான புகாரைக் கூறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு காயத்ரி சாய் என்ற பெண் தன்னிடம் ஓரினச் சேர்க்கைக்கு முயற்சித்ததாக புகார் கூறி சலசலப்பை ஏற்படுத்தியவர். எனவே விஷால் மீதான புகாரில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவில்லை.

    English summary
    Young Woman complaint Mee too on Actor Vishal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X