புருஷனை பயமுறுத்த அனிதா செய்த "அந்த" காரியம்.. விளையாட்டு வினையான பரிதாபம்!
உடலில் தீப்பிடித்து இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
சென்னை: புருஷனை பயமுறுத்துவதற்காக சும்மா விளையாட்டுக்கு மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண், பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரை சேர்ந்தவர் அனிதா. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்ற இளைஞரை காதலித்து, பின்னர் இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் கல்யாணமும் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
அனிதாவின் தந்தை 5 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டதால், தனியாக இருக்கும் தன் தாயுடன் கடந்த சில தினங்களாக தங்கி வந்துள்ளார். அப்போது, வினோத்குமார் தினமும் குடித்துவிட்டு அனிதாவிடம் தகராறு செய்து வந்ததாகவும், இதனால் அனிதா வினோத்குமார் மீது கோபத்திலும் வருத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. .
இந்நிலையில், தான் தற்கொலை செய்து கொள்வது போல, கணவரை பயமுறுத்தி மிரட்டினால் இனி அவர், தண்ணி அடிக்க மாட்டார் என்று நினைத்தார் அனிதா. அதற்காக தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல நடித்தார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக, அனிதா உடலில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதைபார்த்து அலறிய வினோத்குமார் உள்ளிட்ட, பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அனிதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அனிதா ஒரு வார கால தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், அது பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.