சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாத்ரூமில் பிணமாக கிடந்த பிங்கி.. கொலையாளி யார்.. முக்கிய தடயம் சிக்கியதாக தகவல்.. சென்னையில் பகீர்

சென்னையில் வடமாநில பெண்ணை மர்மநபர்கள் கொலை செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டின் பாத்ரூமில் இளம்பெண் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது சம்பந்தமாக 3 பேரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி. வயசு 30. இவரின் கணவர் உத்தம் மண்டேல். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர்.

பிங்கி ஒரு தொழிலதிபர்.. நல்ல வசதி.. அண்ணாநகரில் குடியிருந்து வந்தார். சேலை விற்பனை செய்து வந்தார். மேலும் டாட்டூ வரைதல் வேலையும் பார்த்து வந்தார்.

பாத்ரூம்

பாத்ரூம்

கணவரை பிரிந்து வாழும் பிங்கியுடன் 26 வயசு இளைஞர் ஒருவர் தங்கி இருக்கிறார். இந்நிலையில், வெளியே சென்றிருந்த அந்த இளைஞர், வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பாத்ரூமில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

விசாரணை

விசாரணை

இதை பார்த்து அதிர்ந்து போன இளைஞர், உடனடியாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் சொன்னார். விரைந்து வந்த போலீசார், பிங்கியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.

அடையாளம்

அடையாளம்

முதல் வேலையாக பிங்கியின் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் பேர் பிங்கியின் வீட்டுக்குள் சென்று, சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர்கள் யார் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அதனால் அவர்கள் 2 பேர் மற்றும் பிங்கியின் வீட்டிலேயே தங்கி இருந்த அந்த இளைஞர் என 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இதை தவிர பிங்கியின் செல்போனையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

கொலை

கொலை

பண விவகாரத்துக்காக இந்த கொலை நடந்துள்ளதா, அல்லது பிரிந்து வாழும் கணவர் தரப்பில் இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வீட்டிலேயே தங்கியிருந்த அந்த நபர்தான்பிங்கி கொலையில் சம்பந்தப்பட்டுள்ளாரா, என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விசாரணை

விசாரணை

ஆனால் முக்கிய தடயம் ஒன்று சிக்கி உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் பாத்ரூமில் பிங்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்ணா நகர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Young Woman murdered in her house by mysterious people and Chennai Anna Nagar Police investigate on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X