வெங்காயத்தை சாப்பிடுங்க.. சாப்பிடாம போங்க... இளைஞர் காங். நூதனப் போராட்டம்
சென்னை: வெங்காயத்தை அதிகம் தாம் உணவில் சேர்ப்பதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா, சாப்பிடவில்லையா என்பது இங்கு முக்கியமில்லை என்றும், அதன் விலை உயர்வால் மக்கள் படும் அவஸ்தையே முக்கியம் எனவும் கூறுகிறார்கள் இளைஞர் காங்கிரஸார்.
சென்னையில் வெங்காயத்தை தட்டில் வைத்து இலவசமாக விநியோகித்து நூதனப் போராட்டம் நடத்தியுள்ளது இளைஞர் காங்கிரஸ்.
காங். எதிர்வினை
வெங்காயம், பூண்டு, உள்ளிட்டவைகளை தாம் அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர். வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நிர்மலா வெங்காயம் சாப்பிடமாட்டாராம்.. அப்ப பட்டர் புரூட்டையா சாப்பிடுகிறார்?.. ப.சி. பொளேர் கேள்வி!
இலவச வெங்காயம்
சென்னை செம்பாக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹசன் மவுலானா, ஜெபி மாத்யூ ஆகியோர் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயத்தை வழங்கி, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி நூதனப் போராட்டம் நடைபெற்றது.
எதிர்ப்பு
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுகிறாரா சாப்பிடவில்லை என்பது நாட்டிற்கு முக்கியம் இல்லை என்றும், பொறுப்புள்ள ஒரு நிதி அமைச்சரிடம் இருந்து இது போன்ற பதிலை நாடு எதிர்பார்க்கவில்லை எனவும் இளைஞர் காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜெபி மாத்யூ தெரிவித்துள்ளார்.
போராடுவோம்
மலைபோல் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெங்காயம் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் நாடு முழுவதும் இளைஞர் காங்கிரஸார் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் எனவும் கூறுகிறார் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன்.