காரை பின்தொடர்ந்த இளைஞர்.. என்னப்பா வேண்டும் என கேட்ட சசிகலா.. காரில் அமர்ந்தபடியே செல்பி
சென்னை: வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இளைஞரை அழைத்த சசிகலா அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதையடுத்து அந்த இளைஞரும் நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.
Recommended Video
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் சசிகலா வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியை தாண்டிய சசிகலா ஒசூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பிரத்தியங்கரா கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார்.
சசிகலா வந்தா என்ன.. யார் வரவேற்றால் என்ன.. சலசலப்புகளுக்கு அஞ்சாத
இளைஞர்
கோயில்களில் தரிசனத்தை முடித்துக் கொண்டு சசிகலா தனது பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவரது வாகனத்துடன் இரு சக்கர வாகனம் ஒன்றும் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. சசிகலாவை பார்த்து அந்த இளைஞர் ஏதோ சொல்லியுள்ளார்.
இளைஞரும் நிறுத்தம்
பின்னர் அவரது வாகனம் நிறுத்தப்பட்டது. அந்த இளைஞரும் வாகனத்தை நிறுத்தினார். உடனே பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். அங்கிருந்த போலீஸாரும் ஓடி வந்தனர். ஏதோ தகராறு செய்ய அந்த இளைஞர் வந்ததாக நினைத்து மிரட்டினர். அப்போது அந்த இளைஞர் வேகமாக வந்தார்.
இளைஞருடன் செல்பி
தங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து காரில் இருந்த படியே சசிகலா அந்த இளைஞருடன் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் சசிகலாவுக்கு நன்றி தெரிவித்த அந்த இளைஞர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா
இதன் மூலம் தன்னை எளிதாக அணுகும் ஒரு தலைவி என்பதையும் சசிகலா நிரூபித்துள்ளார். இளைஞரின் சாதாரண ஒரு கோரிக்கையைகூட அவர் நிறைவேற்றியுள்ளார். அது போல் கூவத்தூர் சென்ற போது அங்கு குழந்தைகளுக்கு பெயர் வைத்து அங்குள்ள மக்களுடன் சகஜமாகவும் அவர் பழகியது குறிப்பிடத்தக்கது.