சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...!

தாய்மாமனை இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...!

    சென்னை: "மாமா.. இப்படி பேசாதே.." என்று சொல்லி சொல்லி பார்த்தார் கோகுல்ராஜ்.. ஆனால், 60 வயது தாய்மாமனுக்கு வாயை திறந்தாலே கூவம்தான்.. தன் அம்மாவை அசிங்க அசிங்கமாக திட்டியதால், கருங்கல்லை கொண்டே தாய்மாமனை அடித்து கொன்றுவிட்டார் கோகுல்ராஜ்!
    சென்னை ஆலந்தூர், ஆசர்கானா பகுதியில் வசித்து வரும் தம்பதி சவுந்தராஜன் - சரஸ்வதி. இவர்களுக்கு 31 வயதில் கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். ஒரு தனியார் கொரியர் ஆபீசில் வேலை பார்க்கிறார்.

    கோகுல்ராஜின் தாய் மாமன், அதாவது சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ். இவருக்கு அப்புன் என்று இன்னொரு பட்ட பெயர் உண்டு. 60 வயசு குடிகாரன்.

    தங்கை

    தங்கை

    தண்ணி போட்டுவிட்டால், தங்கை, தாரை தெரியாது.. நடுத்தெருவில் நின்று கொண்டு திட்ட ஆரம்பித்துவிடுவார். இது கோகுல்ராஜுக்கு சங்கடத்தை தந்தது.. அதனால் பலமுறை மாமா, இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி உள்ளார். ஆனாலும் தாய்மாமன் பேச்சு அவமானத்தையே தந்தது.

     தாய்மாமன்

    தாய்மாமன்

    இப்படித்தான் வழக்கம்போல் தண்ணி அடித்துவிட்டு நடுராத்திரி வந்தார் எத்திராஜ். ரோட்டில் நின்றுகொண்டு, தங்கையை ஆபாசமாகப் பேசி திட்டியதுடன், கூடவே அவரது குடும்பத்தையும் இழுத்து வந்து கேவலப்படுத்தி பேசினார். இதனால் ஆத்திரம் மண்டைக்கேறிய கோகுல்ராஜ், தாய்மாமனை சரமாரி அடித்து, அங்கிருந்து கிளம்பி செல்லும்படி சொன்னார்.

    நிறுத்தவில்லை

    நிறுத்தவில்லை

    ஆனாலும், எவ்வளவு அடி வாங்கினாலும், தாய்மாமன் அங்கிருந்து நகர்ந்து போகவே இல்லை.. கெட்ட வார்த்தைகளால் தங்கையை திட்டுவதையும் நிறுத்தவே இல்லை.. இதனால் பொறுமை இழந்த கோகுல்ராஜ் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் கடுமையாக தாக்கிவிட்டார்.

    கைது

    கைது

    இதில், தாய்மாமன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.. அங்கேயே துடிதுடித்தும் இறந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் அளிக்கவும், விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, கோகுல்ராஜையும் கைது செய்தனர்.

    English summary
    young man arrested for killing his maternal uncle in chennai due to family issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X