ஆழ்துளை கிணற்றை சுற்றி கூட்டம்.. தலைகீழாக உள்ளே இறக்கப்படும் இளைஞர்.. ஒரு பாசிட்டிவ் மெசேஜ்!
இளைஞர்கள் துளையில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்கிறார்கள்
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணற்றை சுற்றி இளைஞர்கள் பதற்றத்துடன் நிற்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இது எந்த ஊர் என்று தெரியவில்லை. ஒரு ஆழ்துளை கிணற்றினை சுற்றி இளைஞர்கள் கூடிஉள்ளனர். உள்ளே யார் விழுந்துவிட்டார்கள், யாருக்கு என்ன ஆச்சோ என்று தெரியாத அளவுக்கு ஒரு பரபரப்பு தோன்றுகிறது.
பிறகுதான் குழிக்குள் விழுந்தது ஒரு ஆட்டுக்குட்டி என்று தெரிகிறது. இந்த குழி இருப்பதை பார்க்காமல் அந்த ஆட்டுக்குட்டி இதற்குள் விழுந்திருக்கிறது. அந்த குழியை பார்த்தால், ஆட்டுக்குட்டி எப்படி உள்ளே போனது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சிறியதாக இருக்கிறது.
இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் ஒன்றுதிரண்டு ஆட்டுக் குட்டியை வெளியே எடுக்க முயற்சிக்கிறார்கள். 4 பேர் சுற்றி நிற்க, ஒருவர் மட்டும் அந்த குழிக்குள் தலையை உள்ளே நுழைக்கிறார். அவரது 2 கால்களையும் வெளியே நண்பர்கள் இறுக்க பிடித்து கொள்கிறார்கள். நடுநடுவே ஆட்டுக்குட்டியிடம் இருந்து ஏதாவது சத்தம் வருகிறதா என்று குழிக்குள் காதை வைத்து கேட்டு கொண்டே இருக்கிறார்கள்.
சுஜித் மரணம்.. ஆக்ஸிஜன் பற்றாக்குறை மட்டுமில்லை.. இதுவும் கூட காரணமாக இருந்திருக்கலாம்!
தலைகீழாக உள்ளே போன இளைஞர், வெளியே வரும்போது ஆட்டுக்குட்டியுடன் வருகிறார். அந்த வெள்ளாட்டுக்குட்டி எல்லாரையும் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டே அங்கிருந்து ஓடுகிறது. அந்த ஆட்டுக்குட்டி விழுந்தது சின்ன குழிதான் என்றாலும், இளைஞர்கள் உயிருடன் வெளியே கொண்டு வர போராடுகிறார்கள்.
சுஜித்தை பறிகொடுத்த நிலையில் நாம் தவித்து வரும்போது, இப்படி ஒரு வீடியோ வந்துள்ளது. இது எப்போது நடந்த சம்பவம் என்றுகூட தெரியவில்லை. இது இப்போது வைரலாகியும் வருகின்றனர். ஆனால், சுஜித் இறந்தபிறகு, எந்த உயிரினம் குழிக்குள் மாட்டிக் கொண்டாலும், இனி நம் மக்கள் துணிந்து காப்பாற்றி விடுவார்கள் என்று மட்டும் தெரிகிறது!