கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அக்கா துப்பட்டாவில் ஊஞ்சலாடிய தம்பி.. கழுத்தை இறுக்கி.. மூச்சு திணறி.. பரிதாப மரணம்!

கழுத்தை இறுக்கிய துப்பட்டாவால், 10 வயது சிறுவன் மரணமடைந்தான்

Google Oneindia Tamil News

கோவை: அக்கா துப்பட்டாவை கட்டி ஊஞ்சல்போல தொங்கி விளையாடி கொண்டிருந்த சிறுவன், அப்படியே தொங்கி உயிரை விட்டுவிட்டான்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரை சேர்ந்தவர் சதக்கத்துல்லா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் காஜா உசேன்.. 10 வயதாகிறது.. ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

10 year old boy sudden death near kovai

படு சுட்டியான பையன் இவன்.. நேற்று மாலை வீட்டில் இருந்த காஜா உசேன், தன்னுடைய அக்காளின் சுடிதார் துப்பட்டாவை ஜன்னலில் கட்டினான். பின்னர் கட்டிலில் இருந்து ஊஞ்சல் போல் தொங்கிக்கொண்டு விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டான்.

உடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்!உடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்!

இதனால் துப்பட்டா அவனது கழுத்தில் இறுக்கிவிட்டது.. அடுத்த சில வினாடிகளில் மூச்சுத்திணறி காஜா மயங்கினான். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அலறிவிட்டனர்.. மயங்கி விழுந்த காஜாவை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக சொல்லிவிட்டனர்.

இதை கேட்டு பெற்றோர் கதறி கதறி அழுதனர்.. அவ்வளவு நேரம் கண்ணெதிரே துருதுருன்னு விளையாடிட்டு இருந்த குழந்தை, இப்படி திடீர்ன்னு இறந்து போய்ட்டானே என்று அவனது உடலை கட்டிப்பிடித்து கொண்டு கதறி அழுதது, காண்போரை கலங்க வைத்துவிட்டது.

இந்த துயர சம்பவம் குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
10 year old boy died while he playing with dupatta and struck near coimbatore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X