11 வயது சிறுமி.. 3 சிறுவர்கள் சேர்ந்து.. பலான படம் பார்த்து கொண்டே நாசம் செய்த அக்கிரமம்.. கோவை ஷாக்
கோவை: செக்ஸ் வீடியோவை பார்த்து கொண்டே 11 வயது சிறுமியை மாறி மாறி சீரழித்துள்ளனர் 3 பேர்.. இதைவிட அதிர்ச்சி, 11 வயது சிறுமியை ஒரு வாரத்துக்கு தொடர்ந்து நாசம் செய்தது 3 சிறுவர்கள்தான்!
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் அவர்.. 11 வயதாகிறது.. 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமிக்கு அம்மா இல்லை... இவள் குழந்தையாக இருந்தபோதே அவர் இறந்துவிட்டார்.. அதனால் அப்பாதான் மகளை வளர்த்து வருகிறார்.. இவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் கீழ்பகுதியிலேயே அந்த ஹவுஸ் ஓனர் இருந்தனர்.. அந்த வீட்டில் 17 வயது சிறுவனும் ஒருவன்!
சிறுமியின் அப்பா வேலைக்கு போய்விடுவார்.. அதேபோல அந்த வீட்டு ஹவுஸ் ஓனர் புக் ஸ்டால் வைத்திருப்பதால் அவர்களும் வீட்டில் இருக்கமாட்டார்கள்.. பெரும்பாலும் தனியாக இருப்பது அந்த வீட்டு 17 வயது சிறுவனும், மாடியில் உள்ள 11 வயது சிறுமியும்தான்! பையன் 10-ம் வகுப்பு படிப்பு படிப்பதால் ஆன்லைன் கிளாஸ்-க்காக ஒரு ஸ்மார்ட் போனும் வாங்கி தந்துள்ளனர்!
ஆனால் சிறுமி வீட்டிலோ சாதாரண டிவி கூட இல்லை.. அதனால் அந்த வீட்டில் சென்றுதான் டிவி பார்ப்பது வழக்கம். கடந்த மாதம் 20ம் தேதி அப்படித்தான் ஹவுஸ் ஓனர் வீட்டிற்கு சென்றிருக்கிறார் சிறுமி.. அந்த நேரம் பார்த்து 17 வயது சிறுவனின் நண்பர்கள் 2 பேரும் அங்கு இருந்திருக்கிறார்கள்.. 3 பேரும் சேர்ந்து செக்ஸ் வீடியோ செல்போனில் பார்த்து கொண்டிருந்துள்ளனர்.
சிறுமி, வீட்டிற்குள் வந்ததும் கட்டாயப்படுத்தி அந்த படத்தை பார்க்க வைத்துள்ளனர்.. பிறகு, அடுத்தடுத்து சிறுமியை 3 பேரும் சேர்ந்து நாசமும் செய்துள்ளனர்.. விஷயத்தை வெளியே சொன்னால் அவ்வளவுதான் என்று மிரட்டுலும் விடுத்துள்ளனர்.. இப்படியே ஒரு வாரத்துக்கு சிறுமியை 3 பேரும் சேர்ந்து சிதைத்துள்ளனர்.
பிறகுதான் சிறுமிக்கு வயிற்று வலி ஆரம்பமாகி உள்ளது.. வயிறு ரொம்ப வலிக்குது என்று குழந்தை சொன்னதுமே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார் அவரது அப்பா.. அப்போதுதான் டாக்டர்கள் அதிர்ந்தனர்.. நடந்தவை குறித்து சிறுமி டாக்டர்களிடம் எல்லா விஷயத்தையும் அழுதுகொண்டே சொன்னார்.. பிறகுதான் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை ஆணவக்கொலை அப்பீல் வழக்கு தீர்ப்பு டைம் லைன்: 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி அந்த 3 சிறுவர்கள் மீதும் புகார் தந்தார்... போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கும் பதிவானது.. அந்த 3 பேரில் 2 பேர்தான் சிக்கினர்.. ஒருவருக்கு வயசு 16, இன்னொருவருக்கு 17.. தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை தேடி வருகிறார்கள்!
படிக்கிற வயசில் இந்த பிள்ளைகள் செய்ற காரியங்களை நினைத்தால், இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல!