புதர் மண்டிய பூங்காவில்.. காதலியை சீரழித்த காதலன்.. அடுத்தடுத்து 6 பேர்.. கோவையை அதிர வைத்த சம்பவம்
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
கோவை: இரவு நேரம்.. புதர்கள் மண்டிய பார்க்கில்.. 17 வயது சிறுமியுடன் ஜாலியாக இருந்து, பிறந்த நாள் பரிசு தந்துள்ளார் காதலன்.. இதையடுத்து, தன் நண்பர்களுக்கும் காதலியை விருந்தாக அளித்து வீடியோ எடுத்துள்ளார்.. இந்த சம்பவம் கோவையை உலுக்கி எடுத்து வருகிறது.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது.
காதலி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆவார்.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பள்ளி முடிந்து பார்க்கிற்கு வந்துள்ளனர்.
நண்பர்கள்
அதே பார்க்கில் வைத்து, சிறுமியிடம் ஜாலியாக இருந்து.. அதை காதல் பரிசாக தந்துள்ளார் காதலன்.. இப்படி ஜாலியாக இருப்பதை மறைந்திருந்து 6 பேர் கொண்ட ஒரு கும்பல் வீடியோவும் எடுத்துள்ளது. இந்த கும்பல் காதலனுக்கு நண்பர்களாம்.. வீடியோ எடுத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல, பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.
காட்டுப்பகுதி
இப்போது மற்ற நண்பர்களும் சிறுமியை பார்க் பின்பக்கம் இருந்த காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று நாசம் செய்துள்ளனர். காதலனின் நெருங்கிய நண்பன் மணிகண்டதான் முதலில் வன்கொடுமை செய்துள்ளான். ஒருவர் பெண்ணை சீரழிக்க, இன்னொருவர் வீடியோ எடுக்க, மற்றவர்கள் யாராவது வருகிறார்களா என காவல் காக்க.. என்று படுபாதக செயல் அந்த பார்க்கில் அரங்கேறி உள்ளது.
வீடியோ
இறுதியில் அந்த பெண் உருக்குலைந்த நிலையில் தன் வீட்டிற்கு சென்று கொடூரத்தை பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறாள். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், உடனடியாக ஆர்எஸ்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யவும், மணிகண்டன், ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயண மூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். ஆனால் இவர்களுக்கு நேரடியாக இந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என்றும், இவர்கள் உடன் சென்றவர்கள்தான் போட்டோக்களையும், வீடியோவையும் எடுத்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
புதர்கள்
இதில், முக்கிய குற்றவாளியான மணிகண்டன், மற்றும் வீடியோ எடுத்த கார்த்திக் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட சிறுவர் பூங்காவில் எந்த பராமரிப்பும் இல்லை என தெரிகிறது.. ஏற்கனவே அந்த பூங்காவில் புதர்கள் மண்டி கிடக்குமாம். இதை கவனித்து வைத்துதான், இந்த கும்பல் பிளான் பண்ணி மாணவியை அங்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.