ஈவான்னா.. எனக்கு ரொம்ப ஆசை.. 17 வயசு காதலியை.. கத்தியால் குத்தி.. மலையிலிருந்து உருட்டி விட்ட காதலன்
17 வயது சிறுமியை கொன்ற காதலன் கைதானார்
கோவை: ஈவா..ன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்.. அவளை பிரிந்து என்னால இருக்கவே முடியல.. இதை சொல்றதுக்காதான் முயற்சி பண்ணேன்.. ஆனால் கத்தி எடுத்து குத்தி கொலை செய்து.. மலை மேல இருந்து உருட்டி விடுவேன்னு நானே எதிர்பார்க்கல" என்று 17 வயது காதலியை கொன்ற காதலன் வாக்குமூலம் தந்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் நெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சபீர்.. இவர் கார் ஷோரூம் ஒன்றில் டிரைவர்.. 26 வயதாகிறது.. இவரும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஈவா என்ற மாணவியும் காதலர்கள்.. ஈவாவுக்கு வயசு 17.. 2 வருட காதல் இது.
இந்நிலையில் 2 நாளைக்கு முன்பு ஈவா திடீரென மாயமானார். அவரை வீட்டில் தேடியலைந்தபோதுதான், சபீர் சர்வீசுக்கு வந்த காரில் ஈவாயை கடத்தி சென்றது தெரியவந்தது... காரும் இல்லை. சபீரும் இல்லை என்பதால் ஷோ ரூம் நிர்வாகத்தினர் எர்ணாகுளம் போலீசில் புகார் தரவும் அதன்படி தேடுதல் வேட்டை ஆரம்பமானது.
அப்ளிகேஷன் எழுதக் கூப்பிட்டேன்.. அவன் வரலை.. வாழவே பிடிக்கலை.. ஹாஸ்டல் ரூமில் தூக்கில் தொங்கிய மாணவி
சபீர் கார்
அந்த காரின் நம்பர் வால்பாறை பக்கம் செல்வதால், கேரள போலீசார் வால்பாறை போலீசாரின் உதவியை நாடினர்.. அதன்படியே சபீர் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.. ஆனால் காரில் சபீர் இருந்தார்.. ஈவா இல்லை.. அதற்கு பதிலாக முன்சீட்டில் ரத்த கறைதான் இருந்தது.
காலேஜ்
இதற்கு பிறகு விசாரணை தீவிரமாக நடந்தது.. அப்போது சபீர் சொன்னதாவது: "ஈவா படிப்பு முடிஞ்சதும், ஃபாரீன் போய் காலேஜ் படிக்க போறதா சொன்னாள்.. எனக்கு இது பிடிக்கல.. வேண்டாம்னு சொன்னேன்.. ஆனால் ஈவா உறுதியாக இருக்கவும் நான் தகராறு செய்தேன்.. அதனால என்கூட பேசுறதை தவிர்த்தாள்.. இது எனக்கு பயமா இருந்தது.. எங்கே என்னை விட்டுட்டு போய்டுவாளோன்னு நினைச்சேன்.
வால்பாறை
அதனால என் நிலைமையை எடுத்து சொல்ல ஈவாவை ஸ்கூல் முடிந்ததும் காரில் போய் பிக்கப் பண்ணி கொண்டு, வால்பாறைக்கு அழைத்து வந்தேன். ஆனால் கிளம்பினதில் இருந்தே வழியெல்லாம் 2 பேருக்கும் சண்டை.. அந்த ஆத்திரத்தில் மளுக்கப்பாறை பகுதியில் ஈவாயை கத்தியால் குத்திவிட்டேன்.. வர்ற வழியில் ஒரு மலையில் இருந்து உருட்டி விட்டேன்" என்றார்.
சடலம்
இதை கேட்டு அதிர்ந்த போலீசார் சபீரை அழைத்து கொண்டு ஈவாவை உருட்டிவிட்ட இடத்துக்கு சென்றனர்.. ஆனால் ஈவா உடல் ஒருநாள் முழுதும் தேடியும் அந்த மலைப்பகுதியில் எங்குமே கிடைக்கவில்லை.. பிறகுதான், வால்பாறை - வறட்டுப்பாறை எஸ்டேட் காட்டுப்பகுதியில் சடலம் கிடைத்தது.. இதன்பிறகு ஈவாவின் சடலம், சபீரை வால்பாறை போலீசார் கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.