கோவையில் 3 மாத ஆண் குழந்தை திடீர் மரணம்.. தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமா?
கோவை: கோவையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கோவை: தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை… மூச்சு பேச்சின்றி திடீர் பலி!
கோவை மசக்காளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாத். கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு பிறந்து 3 மாதமே ஆன கிசான் என்ற ஆண் குழந்தை இருந்தது.
3 மாதத்திற்கு உண்டான தடுப்பூசியை போட கோவையில் சுகாதாரத் துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட அழைத்து சென்றது.
அங்கு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன் சிறிது நேரம் அழுது கொண்டிருந்த குழந்தை பால் குடிக்கவில்லை. இதனால் குழந்தையின் பெற்றோர் அங்கன்வாடி மையத்தின் உள்ளே மீண்டும் சென்ற போது குழந்தை இறந்துவிட்டது.
உயிரிழந்த 3 மாத குழந்தைக்கு ஏற்கெனவே சளி, மூச்சுத்திணறல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments
English summary
3 months baby died in Coimbatore after he was given vaccine. Police investigation going on.
Story first published: Thursday, February 18, 2021, 10:54 [IST]