கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாம்பு வந்துவிட்டது.. மீட்பு குழுவிற்கு அவசரமாக வந்த போன்.. சென்று பார்த்தால் ஷாக்.. கோவையில் பகீர்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் ஒரு வீட்டின் கழிவறையில் 35 பாம்புகள் மொத்தமாக குடும்பம் நடத்தி வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Recommended Video

    பாம்பு வந்துவிட்டது.. மீட்பு குழுவிற்கு அவசரமாக வந்த போன்.. சென்று பார்த்தால் ஷாக்.. கோவையில் பகீர்!

    நேற்று முதல்நாள் கோயம்புத்தூரில் உள்ள கோவில்மேடு பகுதியில் இருந்து பாம்புகளை மீட்கும் மீட்பு குழு ஒன்றுக்கு அவசரமாக போன் வந்துள்ளது. எங்கள் வீட்டு கழிப்பறையில் பாம்பு ஒன்று இருக்கிறது. அந்த பாம்பு பெரிதாக உள்ளது என்று கூறியுள்ளனர்

    இதை அடித்து கொல்ல முடியாது என்று தோன்றுகிறது. உடனே வந்து அந்த பாம்புகளை மீட்டு செல்லுங்கள் என்று தகவல் கொடுத்துள்ளனர்.

    வேகமாக வந்தனர்

    வேகமாக வந்தனர்

    இதையடுத்து அங்கு வேகமாக மீட்பு குழு வந்தது. அந்த வீட்டின் கழிப்பறையில் வீரியன் வகை பாம்பு ஒன்று இருந்துள்ளது. இந்த பாம்பு மிக பெரிதாக இருந்து உள்ளது. சரி ஒரு பாம்பு தானே அதை எளிதாக பிடித்து விடாமல் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக பாம்பு பிடிக்கும் மீட்பு குழுவை சேர்ந்த முரளி, ஒரு பையை எடுத்துக் கொண்டு, பாம்பை பிடிக்க அருகில் சென்று உள்ளார்.

    பெரும் அதிர்ச்சி

    பெரும் அதிர்ச்சி

    பாம்ப்பை பிடிக்க அருகே சென்றவருக்கு பெரிய அதிர்ச்சி. அந்த ஒரு பாம்பு அங்கே பெரிய குடும்பத்தையே நடத்தி உள்ளது. ஆம், அந்த பாம்பு அங்கேயே குஞ்சு பொறித்து குட்டிகளை பெற்றுள்ளது. நிறைய குட்டிகளை பாம்புகள் அங்கு போட்டுள்ளது. அம்மா பாம்பு உட்பட மொத்தம் 36 பாம்புகள் அங்கே இருந்துள்ளது. இதை பார்த்து மீட்பு குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

    கஷ்டப்பட்டு

    கஷ்டப்பட்டு

    35 பாம்புகள் வீரியன் வகை பாம்புகள் ஆகும். எல்லாம் குட்டி குட்டி பாம்புகள் ஆகும். இந்த பாம்புகள் சில நாட்களுக்கு முன்பு இங்கே குஞ்சு பொறிக்க வந்து இருக்கலாம். நீண்ட நாட்களாக அங்கே இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இது அதிக விஷத்தன்மை கொண்ட வீரியமான பாம்பு ஆகும். இதையடுத்து அந்த பாம்பை மீட்க பெரிய அளவில் பைகள் கொண்டு வரப்பட்டது.

    காட்டுக்குள் விட்டனர்

    காட்டுக்குள் விட்டனர்

    கடைசியாக அந்த பாம்புகளை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கஷ்டப்பட்டு பிடித்தனர். அதன்பின் அந்த பாம்புகளை எடுத்துக் கொண்டுபோய் கோவையில் இருக்கும் காட்டு பகுதி ஒன்றில் விட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 35 பாம்புகள் ஒரு வீட்டின் கழிப்பறையில் இருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    A family of 35 snakelets and their mother, a viper, found in the bathroom in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X