கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

65 வயசுல செய்ற வேலையா இது.. அதுவும் பள்ளிக்கூடத்தில்.. தாத்தாவை கொத்தாக தூக்கிய போலீஸ்!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவர் கைதானார்

Google Oneindia Tamil News

கோவை: 65 வயசாகியும் தாத்தாவுக்கு புத்தி மாறவில்லை.. பேத்தி வயதுள்ள மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து படாத பாடு படுத்தி எடுத்துவிட்டார்.. இது சம்பந்தமான விஷயம் வெளியே தெரிந்ததும், விரைந்து வந்த போலீஸ் தாத்தாவை கைது செய்து உள்ளே வைத்துவிட்டது.

பொள்ளாச்சி அருகே வசித்து வருபவர் தங்கவேல்.. இவருக்குதான் 65 வயசாகிறது.. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்.. இவரது மனைவி அய்யம்மாள்.. 55 வயசாகிறது.. ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

65 year old man arrested for sexually harassing school girl

தினமும் காலையில் அய்யம்மாளை ஸ்கூலில் கொண்டு போய் விட்டுட்டு வருவது தங்கவேல்தான்.. அப்படி மனைவியை ஸ்கூலில் விட்டுவிட்டு, இவரும் பின்னாடியே ஸ்கூலுக்குள் வருவாராம்.. மதியான நேரத்தில் பள்ளி வளாகத்தில் ஒரு ரூம் இருக்கிறதாம்.. அந்த ரூமில், அதே ஸ்கூலில் படிக்கும் 10 வயது மாணவியை அழைத்து செக்ஸ் டார்ச்சர் தருவாராம்.

யாரிடமும் இதை சொல்ல முடியாமல், அளவுக்கு அதிகமாக மனவேதனையால் தவித்திருக்கிறாள் அந்த குழந்தை.. தினமும் இது எல்லை மீறி நடக்கவும், வேறு வழியில்லாமல் தலைமை ஆசிரியை அய்யம்மாளிடம் கண்ணீருடன் இதை சொல்லி உள்ளார்.. ஆனால் புகார் அளித்தும் அய்யம்மாள் இதை கண்டுகொள்ளவே இல்லையாம்.. அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவியை அடித்து மிரட்டியும் வந்துள்ளதாக தெரிகிறது.

அதனால், மாணவி வேறு ஒரு ஸ்கூலுக்கு மாறி போய்விட்டார்.. சம்பந்தப்பட்ட மாணவியை ஸ்கூலில் காணாமல் தங்கவேல் ரொம்பவே திணறிவிட்டார்.. அதனால், நேரடியாக அந்த மாணவியின் வீட்டுக்கே சென்று,
"ஏன் இப்போதெல்லாம் ஸ்கூலுக்கு வருவதில்லை" என்று கேட்டுள்ளார்.. வீடு வரைக்கும் தங்கவேல் தேடி வந்துவிட்டதை பார்த்து பயந்துபோன மாணவி, அலறி அடித்து கொண்டு பெற்றோரிடம் நடந்த எல்லாவற்றையும் சொல்லி உள்ளார்.

7.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம்: அமைச்சர் ஜெயக்குமார் 7.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம்: அமைச்சர் ஜெயக்குமார்

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொள்ளாச்சி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் உடனடியாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டபோதுதான், தங்கவேலுக்கு உடந்தையாக மனைவி அய்யய்யம்மாள் இருந்ததும் தெரியவந்தது.. இதையடுத்து, போக்சோ மற்றும் மாணவியை மிரட்டுதல், அடித்தல் போன்ற வழக்குகளில் பதிவுசெய்து மகளிர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.. இறுதியில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இந்த ஜோடியை ஜெயிலிலும் அடைத்துள்ளது!

English summary
65 year old man arrested for sexually harassing school girl
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X