கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவையில் பயங்கரம்.. பள்ளி சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை.. கை,கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் பள்ளி சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை-வீடியோ

    கோவை: கோவையில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு 5 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் குழந்தை காணாததைக் கண்டு பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர்.

    பொள்ளாச்சி கொடூரம்... பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்பொள்ளாச்சி கொடூரம்... பார் நாகராஜனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன்

    போலீஸார் தேடல்

    போலீஸார் தேடல்

    எங்கு தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர்.

    போலீஸாருக்கு

    போலீஸாருக்கு

    இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையின் வீட்டருகே உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கோவை அரசு மருத்துவமனைக்கு

    கோவை அரசு மருத்துவமனைக்கு

    போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து உடற்கூறு பரிச்சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மற்றும் தடய அறிவியல் துறையினர் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    7 years old girl who went to school was kidnapped by some and murdered in Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X