கோவையில் நடுஇரவில் பிடிப்பட்ட பெரிய கண்டெய்னர் லாரி.. மர்மம் விலகாத மூட்டைகள்.. யாருடைய லாரி?
கோவையில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
கோயம்புத்தூர்: கோவையில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க தீவிர பரிசோதனைகள் நடந்து வருகிறது. தேர்தலுக்காக அதிகாரிகள் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கோவையில் கண்டெய்னர் லாரி ஒன்று சிறைபிடிக்கப்பட்டது. இந்த லாரியில் என்ன இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
எங்கு இருக்கிறது
கோவையில் உட்கடம் ஆத்து பாலம் அருகே நேற்று இரவு வேகமாக கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. இந்த கண்டெய்னர் லாரி தறிகெட்ட வேகத்தில் நகர்ந்து சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர்.
கண்டெய்னர் லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக பரபரப்பு... மடக்கிப் பிடித்த கோவை மக்கள்!
நிறுத்தினார்கள்
அதன்பின் அதிகாரிகள் வருவதற்குள் கண்டெய்னர் லாரியை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதோடு லாரி டிரைவரை சிறைபிடித்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் லாரியை சிறைபிடித்து, பின் டிரைவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
டீ தூள்
நேற்று இரவே லாரியில் அதிகாரிகள் முதற்கட்டமாக சோதனை நடத்தினார்கள். முதற்கட்ட சோதனையில் லாரியில் டீ தூள் இருந்தது தெரிய வந்தது. மூட்டை மூட்டையாக இதனுள் டீ தூள் இருந்தது. ஆனால் மீதம் இருந்த மூட்டைகளில் என்ன இருந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
சோதனை
இதனால் இன்று மீண்டும் அந்த லாரியில் சோதனை நடத்தினார்கள். தற்போதும் அந்த மூட்டைகளில் சோதனை நடந்து வருகிறது. ஆனால் அந்த மீதம் இருந்த மூட்டைகளில் என்ன இருந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதுகுறித்த கடுமையான விசாரணை நடக்கிறது.
கொச்சி செல்கிறது
அதே சமயம் இது ஜெர்மனுக்கு செல்லும் டீ தூள் என்று அதன் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். ஜெர்மன் நாட்டிற்கு கொச்சியில் இருந்து ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் என்ன
இந்த கண்டெய்னர் லாரியை இப்போது அனுப்பும் எண்ணத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இல்லை என்று கூறியுள்ளனர். எல்லா மூட்டைகளையும் திறந்து பார்த்த பின்பே இதை விடுவிப்போம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க தனிப்படை கோவை சென்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.