கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தல்... பொள்ளாச்சியில் பெண்ணுக்கு வலைவீச்சு

Google Oneindia Tamil News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உறவினர் போல் நடித்து பிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி, காளியாபுரம் - நரிக்கல்பதியைச் சேர்ந்த பாலன் - தேவி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

A Week old Boy baby Kidnap in Pollachi, Police Investigation

மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில், குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பிடிபட்ட வழக்கு... முதல் குற்றவாளியான செல்வம் திரையரங்கில் கைது ஆண்டிபட்டியில் ரூ.1.48 கோடி பிடிபட்ட வழக்கு... முதல் குற்றவாளியான செல்வம் திரையரங்கில் கைது

இதனையடுத்து, குழந்தையை கடத்தியதாக கூறப்படும் அந்த பெண், மற்றும் அவருடன் வந்த நபர் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பணத்திற்காக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
A Week old Boy baby Kidnap in Pollachi Government Hospital
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X