கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறுமியை நான் மட்டுமே பலாத்காரம் செய்தேன்.. 6 மாதமாக விட்டு விட்டு பலாத்காரம்.. இளைஞர் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Kovai Girl News: கோவை சிறுமி கொலை செய்த சந்தோஷ்குமார் ஒப்புதல் வாக்குமூலம்- வீடியோ

    கோவை : சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ்குமார் தான் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

    துடியலூரை அடுத்த பன்னிமடை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும், சந்தேகத்திற்குரிய 6 நபர்களை தொடர்ந்து விசாரித்ததுடன், குற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சந்தோஷ்குமார், துரை, சதிஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

    கோவை சிறுமி வழக்கு; பலாத்காரத்தை பார்த்ததால் பாட்டியையும் கொன்று சந்தோஷ் நாடகமா? கோவை சிறுமி வழக்கு; பலாத்காரத்தை பார்த்ததால் பாட்டியையும் கொன்று சந்தோஷ் நாடகமா?

    பாட்டி வீடு

    பாட்டி வீடு

    இந்நிலையில், தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் தனது மனைவியை பிரிந்து தொண்டாமுத்தூர் உலியம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார் . அவ்வப்போது தனது பாட்டி வீட்டிற்கு கஸ்தூரிநாயக்கன்பாளையம் புதூருக்கு வந்து சென்றுள்ளார்.

    செல்போன் எண்

    செல்போன் எண்

    இந்நிலையில் சிறுமி காணாமல் போன போது, சந்தோஷ்குமார் சம்பவ இடத்தில் இருந்துள்ளதற்கு, ஆதாரமாக, அப்பகுதியிலுள்ள டவரில் அவரது செல்போன் எண் இருந்துள்ளது. இந்நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை போலீஸார் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

    என்ன செய்தார் உங்கள் எம்.பி.

    அடிப்பட்ட குழந்தை

    அடிப்பட்ட குழந்தை

    சந்தோஷ்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், சம்பவம் நடந்த அன்று மாலை தனது பாட்டி வீட்டில் இருந்த சந்தோஷ்குமார் வீட்டின் அருகே விளையாட வந்த சிறுமியை பிடித்து இழுத்துள்ளார். அப்போது கீழே விழுந்த சிறுமியின் நெற்றி மற்றும் தாடையில் அடிபட்டுள்ளது.

    மீண்டும் பலாத்காரம்

    மீண்டும் பலாத்காரம்

    பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், அப்போது மயக்கமடைந்ததாகவும் மீண்டும் மயக்கம் தெளிந்தவுடன் வாயை பொற்றி பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கியபோது சிறுமி இறந்துள்ளார்.

    அப்பகுதி

    அப்பகுதி

    குழந்தை இறந்ததை அடுத்து போலீசார் அப்பகுதியில் குழந்தையை தேடி வருவதை பார்த்துவிட்டு அதை டீ சர்ட்டில் மறைத்து வைத்து போலீசார் அப்பகுதியை விட்டு நகர்ந்தவுடன் அங்கிருந்த ஒரு இடத்தில் குழந்தையின் உடலை போட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

    போலீஸார்

    போலீஸார்

    இச்சம்பவம் நடந்த அன்று, சந்தோஷ்குமாரின் பாட்டி உடல் நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு பின்பே சந்தோஷ்குமாரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்துள்ளனர்.

    பாலியல் பலாத்காரம்

    பாலியல் பலாத்காரம்

    சந்தோஷ்குமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து இக்குற்ற சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் சந்தோஷ்குமார் ஆறு மாதமாக இருமுறைக்கு மேல் சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக தெரிகிறது.

    இவர் எந்த கட்சியிலும் இல்லை எனத் தெரிகிறது.

    English summary
    Police arrested Santhosh kumar in Coimbatore girl murder case says that he only raped that girl.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X