கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார் நாகராஜனிடம் சிபிசிஐடி கிடுக்கிப் பிடி விசாரணை.. ஏதாவது உண்மையை கக்குவாரா

சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு நேரில் பார் நாகராஜ் ஆஜராகினார்.

Google Oneindia Tamil News

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பார் நாகராஜன் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார்.

பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் என நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி, காதல் வலை வீசி.. அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய சம்பவத்தை கேள்விப்பட்டு தமிழகமே ஆடிப்போனது.

கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பெண்களை நாசமாக்கிய அந்த கும்பலிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வசந்த் குமார், சதீஷ், சபரீசன், திருநாவுக்கரசு ஆகிய முக்கிய குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கை காலை கட்டி அறுத்து கொன்னிருக்கான் பாவி.. முடிவு தெரியாம நகர மாட்டோம்.. கொந்தளிக்கும் கோவை கை காலை கட்டி அறுத்து கொன்னிருக்கான் பாவி.. முடிவு தெரியாம நகர மாட்டோம்.. கொந்தளிக்கும் கோவை

மணிமாறன்

மணிமாறன்

அந்த விசாரணையின்போது பார் நாகராஜ், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் ஆகிய 2 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர்கள் தகவல் அளித்திருந்தனர்.

நேரில் ஆஜர்

நேரில் ஆஜர்

அதன் அடிப்படையில், சிபிசிஐடி போலீசார் பார் நாகராஜ், மணிமாறன் இரண்டு பேருக்கும் நேற்று சம்மன் அனுப்பியிருந்ததுடன், நாளைக்குள் அதாவது 28-ம்தேதிக்குள் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறும் சொல்லி இருந்தனர்.

விசாரணை

விசாரணை

ஏற்கனவே ஜாமீனில் வெளியே உள்ள பார் நாகராஜ், தனக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்து வருகிறார். சில சமயம் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோவும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் பார் நாகராஜ்! இந்த வழக்கு சம்பந்தமான கேள்விகளை போலீசார் நாகராஜிடம் கேட்டதாக தெரிகிறது!

திருநாவுக்கரசு

திருநாவுக்கரசு

பார் நாகராஜனிடம் என்னதான் விசாரணை நடத்தினாலும் உண்மை வருமா என்று தெரியவில்லை. காரணம் அவர் மீதுதான் மக்கள் அதிக அளவில் புகார்களைக் கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை அவரை முறைப்படி கைது செய்து திருநாவுக்கரசு போல விசாரணை எதுவும் நடத்தியது போலத் தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது மட்டும் அவர் உண்மையை சொல்லி விடுவாரா என்ற கேள்வியும் தானாகவே எழுகிறது.

English summary
Bar Nagaraj appeared before the Kovai CBCID Police today. The police investigated him in connection with the Pollachi Gang Rape Case issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X