அடிதடி வழக்கில் சிக்கினார் பொள்ளாச்சி "பார்" நாகராஜன்.. கைது செய்து தூக்கியது போலீஸ்!
Recommended Video
கோவை: பொள்ளாச்சியில் அடிதடி வழக்கு ஒன்றில் பார் நாகராஜன் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து தனிமையான இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் அந்த பெண்களை பணியவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குருவாயூர் கோவிலில் எடைக்கு எடை தாமரை பூ துலாபாரம் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார் மோடி!
ஜாமீனில்
இந்த நிலையில் புகார் கொடுத்தது தொடர்பாக பெண்ணின் அண்ணனை தாக்கியதாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜனின் பெயர் அடிப்பட்டது. இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பார் நாகராஜன்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலும் சில ஆடியோக்கள் வெளியாகியிருந்தன. அதில் பார் நாகராஜன் ஒரு பெண்ணை மிரட்டுவது போல் இருந்தது. ஏதோ ஒரு கேஸை வாபஸ் வாங்கு என பார் நாகராஜன் மிரட்டுவது போல் இருந்தது.
பெண் மறுப்பு
அதற்கு அந்த பெண் மறுத்த போது உன் கணவரையும் குடும்பத்தையும் தூக்கிவிடுவேன் என பார் நாகராஜன் கொலை மிரட்டல் விடுப்பது போன்று ஆடியோ காட்சிகள் இருந்தன. கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இவர் நிச்சயம் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பொள்ளாச்சி நாகராஜன் கைது
இந்த நிலையில் பொள்ளாச்சி ஜோதி நகரில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பார் நாகராஜன் உள்பட 14 பேரை கைது செய்தனர்.