கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கோவையில் பாக்ஸிங் பயிற்சியாளர் கைது

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் பாக்ஸிங் பயிற்சிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பயற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் கோவைப்புதூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பயன்று வருகிறார்.

தேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்! தேர்தலில் தோல்வி.. காசு வாங்கிய நாயே.. ஓட்டுப் போட்டியா.. போஸ்டர் அடித்து திட்டிய வேட்பாளர்!

உதவி பயிற்சியாளர்

உதவி பயிற்சியாளர்

கல்லூரி நேரம் போக மற்ற நேரத்தில் கோவைப்புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பாக்ஸிங் பயிற்சி பள்ளியில் உதவி பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

10ஆம் வகுப்பு

10ஆம் வகுப்பு

இவர் பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பயிற்சிக்கு வந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு சிபு பாலியல் கொடுத்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

அத்துடன் தனது செல்போனில் படம் பிடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கைது

கைது

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் உதவி பயிற்சியாளரான சிபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் சிபுவை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

English summary
Boxing assistant coacher arrested in pocso act for giving sexual torture to student in Coimbatore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X