மேம்பாலத்தில் மோதிகொண்ட கார்கள்.. உயிர்தப்பிய தம்பதி.. ஷாக் சிசிடிவி காட்சிகள்!
Recommended Video
கோவை: கோவையில் வயதான தம்பதியினர் சென்ற கார் மீது மற்றொரு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கோவை கிணத்துக்கடவிலிருந்து ரங்கசாமி, அவரது மனைவி வசந்தா மற்றும் இவர்களது பேரக்குழந்தைகள் இருவருடன் தனியார் கால் டாக்சி மூலம் காரமடை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒத்தகால்மண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி தவறான பாதையில் எதிரே வந்த கார் ஒன்று ரங்கசாமி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கார்களின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் தவறான பாதையில் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய பத்மநாபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிகொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.