Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆனைமலை யானைகள் முகாமில் உள்ள சின்னத்தம்பி யானையின் உடல்நலம் நன்றாக இருக்கிறது என்றும் அந்த யானை கவலைக்கிடமாக உள்ளது என்று பரவிய செய்தி வதந்தி என்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது.

பி வாசு இயக்கிய சின்னத்தம்பி படத்தை காட்டிலும் அதிக பிரபலமான இன்னொரு சின்னத்தம்பி யாரென்றால் கோவை வனப்பகுதியில் வசிக்கும் யானை ஆகும். இந்த யானை கோவை டாப்சிலிப் வனபகுதியிலிருந்து ஊருக்குள் திரும்பியது.

கும்கி உதவியுடன்

கும்கி உதவியுடன்

அப்போது சில நேரங்களில் பயிர்களை நாசம் செய்து சேட்டை செய்யும் சின்னத்தம்பியை மக்கள் ஊரை விட்டு விரட்ட முடிவு செய்தனர். இதையடுத்து வனத்துறையின் உதவியின் பேரில் அவனுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கும்கி யானைகள் உதவியுடன் காட்டுக்குள் அனுப்பப்பட்டது.

கும்கியாக மாற்ற முடிவு

கும்கியாக மாற்ற முடிவு

எனினும் மீண்டும் ஊருக்குள் வந்தது. இதையடுத்து அந்த யானையை கும்கியாக மாற்ற வனத்துறை முடிவு செய்தது. இதற்கு வனநல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர். இதைடுத்து கும்கியாக மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

இதைத் தொடர்ந்து அந்த யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரகளியாறு யானைகள் முகாமில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த யானைக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வந்தன.

வதந்தியை நம்பாதீர்

வதந்தியை நம்பாதீர்

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறுகையில் சின்னத்தம்பி யானை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நல்ல உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனவே யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+