கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கிய இஸ்லாமியர்கள் | Protests spread all over Tamilnadu

    சென்னை மெரினா புரட்சியை நினைப்படுத்திய இஸ்லாமியர்கள் போராட்டம்.. கோவையில் நடந்தது என்ன?

    கோவை: சென்னை மெரினா புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் கோவையில் இஸ்லாமியர்கள் செல்போன் டார்ச்லைட்டுளை காட்டினர்.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று மாலை போராட்டம் நடத்தினர்.

    மண்டை உடைந்து காயம்

    மண்டை உடைந்து காயம்

    அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் முஸ்லீம் அமைப்பினர் மீது தடியடி நடத்தினர். இதில் ஏராளமானோருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

    ஜல்லிக்கட்டு

    ஜல்லிக்கட்டு

    போலீஸார் தாக்குதலை கண்டித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு நடந்த முஸ்லீம்கள் போராட்டத்தில் மக்கள் செல்போன் டார்ச் லைட்களை எரிய வைத்து போராட்டம் நடத்தினர். இது ஜல்லிக்கட்டு சம்பவத்தை நினைவுப்படுத்தியது.

    தடை

    தடை

    கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதை கண்டித்து சென்னை மெரினாவில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இந்த போராட்டத்தை விட்டு விட்டு கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    டார்ச்லைட்

    டார்ச்லைட்

    இதையடுத்து போராட்டத்தை ஒடுக்க அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே இளைஞர்கள் தங்களிடம் இருந்த செல்போன்களின் டார்ச்லைட்டுகளை காட்டி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். இது பெரிதாக பேசப்பட்டது. விளக்குகளை நிறுத்திவிட்டால் மாணவர்கள் கலைந்து சென்று விடுவர் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் டார்ச் லைட்டை வைத்து உத்வேகத்தை அளித்தனர்.

    English summary
    Coimbatore Anti CAA protest for police lathicharge in washermenpet looks like Chennai Jallikattu protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X