கல்லூரி மாணவி பிரகதி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை.. பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்!
Recommended Video
கோவை: கோவை கல்லூரி மாணவி பிரகதி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவை ராமகிருஷ்ணா கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார்.
கோவையில் கல்லூரி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது!
கல்லூரி விடுதி
இவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு விடுதியில் இருந்து பிரகதி புறப்பட்டு சென்றுள்ளார்.
கைது
இவர் வீடு திரும்பவில்லை என்பதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கடத்தி கொலை
பிரகதியை சதீஷ் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தது தெரியவந்தது. இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆனதால் ஆத்திரமடைந்த சதீஷ், பிரகதியை கடத்தி கொலை செய்துள்ளார்.
3 இடங்களில் கத்திக்குத்து
இதையடுத்து பிரகதியின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பிரகதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் அவரது உடலில் கழுத்து , மார்பகம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.