கோவையில் 4 நாட்களாக கொட்டித் தீர்த்த மழை.. ஓய்வது போல் ஓய்ந்து மீண்டும் பேய்மழை.. சாலைகளில் வெள்ளம்
கோவை: கோவையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பேய்மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து விட்டதால் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமல்லாமல் இந்த மாநிலங்களுக்கு அருகே உள்ள தமிழகத்தின் நெல்லை, கோவை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கோவையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மிதமான மழை பெய்ததால் மழை ஓய்ந்ததாக மக்கள் கருதினர். ஆனால் கடந்த ஒரு மணி நேரமாக பேய் மழை பெய்கிறது.
#Coimbatore live pic.twitter.com/STs176bli5
— JB (@priyamudan_JB) August 8, 2019
சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.