கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்னகுழந்தை பாவம்.. எப்படி மனசுவந்தது.. நல்லா சாத்துங்க.. கோவை சந்தோஷ்குமார் மீது சரமாரி தாக்குதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை சந்தோஷ்குமார் மீது சரமாரி தாக்குதல்-வீடியோ

    கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனை வந்த பாலியல் குற்றவாளி சந்தோஷ்குமாரை அங்கிருந்த மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

    கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி கடந்த 25-ஆம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதை அடுத்து காவல் துறையினர் விடிய விடிய சிறுமியை தேடியுள்ளனர்.

    பின்னர் 26ஆம் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே டீசர்ட் ஒன்றில் சுற்றப்பட்டு சிறுமியின் சடலம் போலீஸாரால் மீட்கப்படடு பிரேத பரிசாதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    கொலையாளி

    கொலையாளி

    இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை போலீஸார் தேடி வந்தனர்.

    ஒருவர் மீது ஒருவர் விழுந்து.. முகத்தோடு முகம் உரசி.. எழுந்திரு ரோஜா எழுந்திரு!ஒருவர் மீது ஒருவர் விழுந்து.. முகத்தோடு முகம் உரசி.. எழுந்திரு ரோஜா எழுந்திரு!

    பலாத்காரம்

    பலாத்காரம்

    இதையடுத்து புகாரின் பேரில் அந்த ஊரை சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளிட்டோரை விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ்குமார் மட்டுமே அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    6 மாதமாக தொல்லை

    6 மாதமாக தொல்லை

    சிறுமியின் வீட்டுக்கு அருகில் சந்தோஷ்குமாரின் பாட்டி வீடு இருக்கிறது. அப்போது வெளியே விளையாடும் சிறுமிக்கு செல்போனில் கேம் காண்பித்தும் சாக்லேட் வாங்கிக் கொடுத்தும் அவ்வப்போது பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை சிறுமி வெளியே சொல்லாததை அறிந்த சந்தோஷ்குமார் கடந்த 6 மாதமாக அந்த சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    பத்திரமாக மீட்பு

    பத்திரமாக மீட்பு

    இதையடுத்து சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பரிசோதனைகள் முடிந்து வெளியே வந்த அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு அடித்தனர். இதையடுத்து அவரை பத்திரமாக மீட்ட போலீஸார் காரில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Santhoshkumar who raped and murdered 6 years old girl near Thudiyalur, Coimbatore, was beaten by people when he was taken for GH for medical test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X