பெண்கள் டிரஸ் மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்.. கோவையில் பரபரப்பு
பெண்கள் உடை மாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது
Recommended Video
கோவை: பெண்கள் டிரஸ் மாற்றுவதை.. பாத்ரூமில் செல்போன் கேமிராவை வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.. பெட்ரோல் பங்க் பெண் ஊழியர்களுக்கு இப்படி ஒரு அவலம் நடந்துள்ளது.. அதுவும் கோவை மாநகரில்!
கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனியில் உள்ளது.
இந்த பங்கில் நிறைய பெண் ஊழியர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.. இந்த பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றுவதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர்.. இந்த வீடியோக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இது யாருன்னு தெரியுதா பாருங்க.. என்னன்னு புரியுதா.. தர்பார் அக்கப்போர்.. தாங்க முடியலடா சாமி..!!
ஊழியர்கள்
இந்த சமயத்தில், இந்த பெட்ரோல் பங்கில், வேலைபார்த்த மணிகண்டன் என்பவர், தன்னை ரூட்ஸ் நிறுவன அதிகாரிகளும் ஊழியர்களும் தாக்கிவிட்டதாக சொல்லி, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
வழக்கு
தன்னை பழிவாங்கும் நோக்கத்தில், பங்க் அதிகாரிகளே, பெட்ரோலை திருடச் சொல்லி, அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, தன்னை அடித்து துன்புறுத்தினார்கள் என்று சாய்பாபா காலனி போலீசில் புகார் தந்தார்.. ஆனால் இது சம்பந்தமாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது.
வீடியோ
இதற்கு பிறகுதான், பெட்ரோல் பங்க்கில் பெண்கள் துணி மாற்றும் வீடியோ வெளியானதாலேயே மணிகண்டன் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெட்ரோல் திருடியதால் வேலையில் இருந்து நீக்கிய ஆத்திரத்திலேயே, பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை, மணிகண்டன் பரப்பியதால், பங்க்கில் வேலை பார்ப்பவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மணிகண்டன்
இது பற்றின விசாரணை மணிகண்டனிடம் துரிதமாக ஆரம்பமானது.. அப்போது பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றும் வீடியோவை எடுத்தது உண்மைதான் என்றும் ஆனால் அந்த வீடியோவை எடுத்தது தான் இல்லை, சுபாஷ் என்ற முன்னாள் ஊழியர் என்றும் மணிகண்டன் கூறுகிறார். சுபாஷ் என்பவர் இந்த பங்கில்தான் வேலை பார்த்திருக்கிறார்.. பெண்கள் உடை மாற்றும் அறைக்கு இந்த சுபாஷ்தான் சூபர்வைசராக இருந்திருக்கிறார்.
சுபாஷ்
இங்கு பெண்களுக்கு துணி மாற்றும் அறையில், அவருடைய செல்போனையும் மறைத்து வைத்துள்ளார்.. பல பெண்களின் வீடியோக்களை இப்படி எடுத்திருக்கிறார்.. 4 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது என்கிறார்கள்.. மேலும் சுபாஷ் இந்த வீடியோ எடுக்க, இன்னொரு பெண் ஊழியரே உடந்தையாகவும் இருந்திருக்கிறாராம்.
பரபரப்பு
இந்த விஷயம் அப்போதே தெரிந்துதான், சுபாஷை வேலையில் இருந்து நீக்கி உள்ளனர்.. ஆனால் அப்போதே எல்லா வீடியோக்களும் டெலிட் செய்துவிட்டார்களாம்.. இப்போது எப்படி இந்த வீடியோ மணிகண்டனுக்கு சென்றது என்றே தெரியவில்லை.. அதனால்தான் மணிகண்டனை அடித்து உதைத்தோம் என்கிறார்கள் பங்க்கில் உள்ளவர்கள்.