கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராத்திரி தண்ணியடிச்சேன்.. காலையில் அம்ருதாவை பார்த்தேன்.. புத்தி மாறிருச்சு.. கொடூரனின் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    காணாமல் போன குழந்தை அம்ருதா கொலையில் சிக்கினான் தாய்மாமன்!

    கோவை: "நான் மாடு மேய்க்கிறவன்.. குழந்தை அம்ருதா விடிகாலை 3.30 மணிக்கு எழுந்து உட்கார்ந்திருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சபல புத்தி வந்துடுச்சு.. அதான் கிணத்து மேட்டுக்கு தூக்கிட்டு போயிட்டேன்" என்று இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்மாமன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கடந்த 3 தினங்களாக தமிழகத்தை உலுக்கியதுதான் அம்ருதாவின் மரணம். தூங்கி கொண்டிருந்த இரண்டரை வயசு குழந்தை எப்படி இறந்தாள், பாழடைந்த கிணற்றில் வீசி கொன்றது யார் என்று போலீசார் 2 தினங்களாக மண்டையை பிய்த்து கொண்டனர்.

    வீட்டில் உள்ளவர்களை யாரை கேட்டாலும் எனக்கு தெரியாது, எனக்கு தெரியாது என்றே பதில் வந்தது. அதனால் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமானது. கிணற்று மேட்டில் காலி மது பாட்டில் கிடந்தது. இதுதான் முதல் தடயம் போலீசுக்கு.

    கொலையாளி யார்?

    கொலையாளி யார்?

    சம்பவத்தன்று குழந்தையின் தாய் காஞ்சனாவுடன் தூங்கியது காஞ்சனாவின் சகோதரர் அதாவது முதல்மனைவி மகன் ரகுநாதன், சித்தி, அவரது மகன் பூபதி ஆகியோர்தான். இந்த 4 பேரில் ஒருத்தர்தான் கொலை செய்திருக்க முடியும் என்று போலீசார் யூகித்தனர்.

    ரகுநாதன்

    ரகுநாதன்

    மதுபாட்டிலை கிணத்துமேட்டில் பார்க்கவும், ரகுநாதனுக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்டு,தங்கள் பாணியில் விசாரணையை நடத்தினர். அப்போதுதான் ரகுநாதன் எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டார். போலீசாரிடம் 26 வயதான தாய்மாமன் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

    குடிப்பழக்கம்

    குடிப்பழக்கம்

    "எல்லாரும் கூட்டு குடும்பமாகதான் இருக்கோம். நான் 10 மாடு வெச்சு வளர்க்கிறேன். வீடு வீடுக்கு பால் ஊத்தறேன். குடிப்பழக்கம் இருக்கு. சம்பவத்தன்று கூட கிணத்து மேட்டில் உட்கார்ந்து தண்ணி அடிச்சேன். அப்புறம் வீட்டுக்குள் தூங்க போய்ட்டேன்.

    பலாத்காரம்

    பலாத்காரம்

    விடிகாலை 3.30 மணிக்கு குழந்தை அம்ருதா எழுந்து உட்கார்ந்திருந்தது. அதை பார்த்ததும் எனக்கு சபலம் வந்துவிட்டது. அதனால குழந்தையை நைசாக கிணத்து மேட்டுக்கு தூக்கிட்டு போனேன். பலாத்காரம் செய்ய போனபோது, அழ ஆரம்பிச்சிட்டாள். அதனால பயந்துட்டேன்.

    நடித்தேன்

    நடித்தேன்

    வீட்டுக்கு திரும்பவும் தூக்கிட்டு போனா, எல்லாருக்கும் சந்தேகம் வந்துடும்னு நினைச்சு, வேற வழி தெரியாம, குழந்தையை உயிருடன் கிணற்றில் போட்டுட்டு வந்துட்டேன். காலைல வழக்கம்போல பால் கறக்க போயிட்டேன். அப்பறம் எல்லாரும் குழந்தையை தேடும்போது நானும் தேடுவது போல நடித்தேன். ஆனால் மது பாட்டிலால் நான் மாட்டிக்கிட்டேன்" என்றார்.

    English summary
    Accust Ragunadhans confession in Police about Baby Amruthas murder near Coimbatore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X