சூ..மந்திரகாளி.. ஓடிப் போ கொரோனாவே.. நீங்க நடத்துங்க ராசா.. கோவையில் ஒரு கூத்து!
கோவை: கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க கோவை அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் கடைபிடித்த ஒருமுறைதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனாவில் இருந்து பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை அறிவியல் உலகம் கூறி வருகிறது. அதேநேரத்தில் பசு கோமியம் குடியுங்க.. பசு சாணத்தில் புரண்டு எழுந்திருங்க.. என்கிற பசலித்தனமான பிற்போக்கு பேச்சுகளும் எழுகின்றன.
இன்னொரு பக்கம் மரபுசார் முறை என்கிற பெயரில் அறிவியலுக்கு முந்தைய காலத்தில் தமிழர் பின்பற்றிய வாழ்வியலே போதும் என்கிற தேசிய சித்தாந்தம் இன்னொரு பக்கம். இவற்றுக்கு மத்தியில்தான் கோவையில் ஒரு கூத்து நடந்துள்ளது.,
கொரோனா தாக்கக் கூடாது என்பதற்காக அரசு பேருந்தில் வேப்பிலை, துளசி, எலுமிச்சை கட்டி பேருந்தை இயக்கி வருகின்றனர். தடம் எண் 14-ல் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.
இது தொடர்பான படம்தான் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நீங்க நடத்துங்க ராசா!