கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெயர் முருகன் - ஜெயா.. செய்த வேலை மாணவர்களுக்கு கஞ்சா விற்றது.. இப்போது சிறையில்!

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

கோவை: காலேஜ் பிள்ளைகளுக்கு ஜோடியாக சென்று கஞ்சா விற்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகன் - ஜெயா. முருகனுக்கு 56 வயதாகிறது. ஜெயாவுக்கு 45 வயதாகிறது.

Couple arrested for supply Kanja in Kovai

இந்நிலையில், சவுரிபாளையம் பகுதியில் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இந்த ஜோடி இங்குமங்கும் நடமாடியும், திருதிருவென விழித்து கொண்டும் சந்தேகத்திற்கிடமான செயல்களையே செய்திருந்தனர்.

இதனை கவனித்துவிட்ட கந்தசாமி, இருவரையும் கூப்பிட்டு விசாரித்தால், அப்போது இருவருமே உளறி உளறி பேசினார்கள். அதனால் அவர்கள் கையில்இருந்த பையை வாங்கி பார்த்தார் கந்தசாமி. அதில் 2 கிலோகஞ்சா பொட்டலங்கள் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவற்றை பறிமுதல் செய்ததுடன், தம்பதியை கைதுசெய்து ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரித்தார். அப்போது, இருவருமே, கஞ்சாவை சின்ன சின்ன பொட்டலங்களில் பேக் செய்து, அதனை தேனியில் இருந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பதாக தெரியவந்தது.

அது மட்டும் இல்லை, காலேஜ் பிள்ளைகளுக்கு கஞ்சா தர வேண்டும் என்பதற்காகவே கோவையிலேயே ஒரு வீடு வாடகைக்கு பிடித்து தங்கி வந்திருக்கிறார்கள். இதையடுத்து, கஞ்சா ஜோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

English summary
Theni Husband and wife arrested for Supply Kanja to the Kovai College Students
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X