வலையில் சிக்கிய டாக்டர் மனைவி.. பொள்ளாச்சி பலாத்கார கும்பல் போனில் அதிர்ச்சி வீடியோ
Recommended Video
பொள்ளாச்சி: உடல் சுகத்திற்கு ஆசைபட்டு திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலிடம், சிக்கி கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாகி வாழ்க்கையை தொலைத்த பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு டாக்டரின் மனைவி தொடர்பான விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பேஸ்புக் மூலம் காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மற்றும் சபரி ராஜன் ஆகிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கும்பல் பணக்கார வீட்டு பெண்களை குறிவைத்து இந்த செக்ஸ் நெட்வொர்க்கை நடத்தி வந்துள்ளது.
திருநாவுக்கரசின் மறுபக்கம்.. படிப்பு எம்பிஏ.. காதல் கல்யாணம்.. வண்டவாளம் அம்பலமாக ஓடிப் போன மனைவி!
டாக்டர் மனைவி
ஆனால் இந்த கும்பல் பிடியில் குடும்பப் பெண்களும் தப்பிக்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருவர்தான் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு பிரபல டாக்டரின் மனைவி என்று தகவல் வெளியாகியுள்ளது. இவரையும் ஃபேஸ்புக் மூலமாகத்தான் அணுகியுள்ளனர், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். பிறகு, மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்து வசதியான குடும்ப பின்னணியை சேர்ந்த பெண் என்பதை இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொண்டனர்.
பேஸ்புக் சாட்
இதன் பிறகு அவரது தேவைகள் குறித்தும், விருப்பங்கள் குறித்தும் பேஸ்புக் சாட்டில் அறிந்து கொண்டனர். இதையடுத்து, உடல் சோர்வை போக்க, ஆயுர்வேத ஆயில்களை ஊற்றி மசாஜ் செய்து விடுவதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதனால் டாக்டர் மனைவிக்கு சபலம் தட்டியது. இதையடுத்து தனது பண்ணை வீட்டுக்கு, அந்த பெண்ணை திருநாவுக்கரசு அழைத்துள்ளார்.
கூட்டு பலாத்காரம்
உடல் சுகத்திற்கு ஆசைபட்டு, டாக்டர் மனைவி பண்ணை வீடு சென்றுள்ளார். அப்போது இந்த அனைத்து காமுகர்களும் சேர்ந்து, கூட்டாக அவரை பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து வைத்து, மீண்டும், மீண்டும் பண்ணை வீட்டுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக, அந்த பெண்ணும், கூப்பிடும்போதெல்லாம் பண்ணை வீடு சென்றுள்ளார். ஆணுறை பயன்படுத்துவதால் கர்ப்பமாக மாட்டீர்கள் என்று கூறி அந்த பெண்ணை முரண்டுபிடிக்கவிடாமல் செய்துள்ளனர். ஒவ்வொரு முறையும், அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்துள்ளனர்.
ரூ.60 லட்சம் செலவு
தற்போது காமுகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போனில் இருந்து இந்த வீடியோ வெளியே வந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு இந்த விவகாரம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு மன்றாடி வருவதாக பொள்ளாச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப பெண்களும் குறி
இளம் மாணவிகள் மட்டுமின்றி கணவரிடம் அதிகமாக இல்லற சுகம் அனுபவிக்காமல் இருக்கும் நடுத்தர வயது பெண்களையும் குறிவைத்து, இந்த கும்பல், பாலியல் ஆசையை தூண்டி கூட்டாக பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து, பிறகு மிரட்டி மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளது. பணக்கார பெண்களாக தேர்ந்தெடுத்தால் வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதோடு, கேட்கும்போதெல்லாம் பணம் கிடைக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.