தாயாக நின்றவருக்கு துரோகம் செஞ்சாங்க.. இரட்டை இலை துரோகத்தின் சின்னம்.. தினகரன் தாக்கு
கோவை: இரட்டை இலை அம்மாவின் சின்னம் அல்ல, அது துரோகத்தின் சின்னம் என்றும் இந்த தேர்தலில் நீங்கள் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருகூர் பகுதியில் வியாழக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், அதனால் தான் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.
பாப்பம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் பேசுகையில், "தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிற பழனிச்சாமி அண்டு கம்பெனியின் துரோகத்தால் தமிழகமே தலைகுனிந்து வெட்கப்படுகிறது. சிறைச்சாலை சென்று, சகோதரியாய், தாயை நின்று முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்தவர்கள். இவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எல்லா மாநில மக்களும் கேட்கிறார்கள். சசிகலா சிறைக்கு சென்ற போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குங்கள் என்று சொன்னதால் தான் அவர் வெற்றி பெற்றார்.
மக்கள்தான் முதல்வர்... என்னை முதல்வராக நினைக்கவில்லை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் பதவியில் அமர்த்தியவர்களுக்கே துரோகம் செய்யும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால், ஆட்சி அதிகாரத்திலே இருக்க யாருக்கும் துரோகம் செய்யலாம் என அவர்கள் வந்துவிட்டதால், அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
துரோகத்திற்கு என்றுமே கொங்கு மண்டல மக்கள் துணை போகமாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அவர்களை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். ஆர்கே நகரில் இரட்டைஇலை அம்மாவின் சின்னம் அல்ல, அது துரோகத்தின் சின்னம் என மக்கள் எப்படி தோல்வியை தந்தார்களோ அதுபோல் தர வேண்டும்" என்றார்.