சென்னை, கோவையில் மின்சார பஸ்கள் அறிமுகம்.. அமைச்சர் வேலுமணி தகவல்
Recommended Video
கோவை: தமிழக தலைநகர் சென்னையிலும், கோவையிலும், எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொடியசைத்து துவக்கிவைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 10 ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்காக வாங்கப்பட்ட 471 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதில் கோவை மண்டலத்திற்கான 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்
எஸ்.பி.வேலுமணி இன்று உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் வாரி வாரி வழங்கியுள்ளார்.
முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 80 சதவீத விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது, மேற்கு புறவழிச்சாலைக்கு நிலம் எடுக்கும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. தற்போது கோவை மண்டலத்திற்கு வழங்கப்பட்டுள்ள பேருந்துகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. சென்னைக்கு 80 மின்சார பேருந்துகளும், கோவையில் 20 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றது. அதற்கான பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் மேற்கொண்டு உள்ளது.
இவை செயல்பாட்டிற்கு வரும் போது செலவு குறைவதுடன் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.