ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தியது யார்? ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் பரபரப்பு பேச்சு
கோவை: ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. குறிப்பாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. அண்மையில் கூட ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் மசோதா விவகாரத்தில் அதிகாரம் என்னிடம் இருந்தால் ஒருநாளும் ஒப்புதல் அளித்து கையெழுத்து போடமாட்டேன் என பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஆளுநரின் பேச்சுக்கு ஆளும் திமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. ஆளுநரின் பேச்சு அவ்வப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்கள் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்கள் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம், பிரிவினையை ஏற்படுத்தினர். ஆங்கிலேயர்கள் நம் கலாசாரம், உயிர்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தனர்" என்றார்.












Click it and Unblock the Notifications