கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்... தமிழக போலீசாரும் விசாரணை
கோவை: கோவையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதி முகமது அசாருதீன் உள்ளிட்டோர் சிக்கினர். இந்த நிலையில் என்.ஐ.ஏ. நேற்று சோதனை நடத்திய இடங்களில் தமிழக போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
இலங்கை தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்திய சஹ்ரானுக்கும் இந்தியாவுக்கும் ஏராளமான தொடர்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டன. இலங்கை சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இதனை பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து கோவையை சேர்ந்த அசாருதீனை குறி வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இச்சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் தென்னிந்திய தளபதியாக அசாருதீன் செயல்பட்டது அம்பலமான்னது.
மேலும் அசாருதீனின் கூட்டாளிகள் 4 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடியில் உள்ளனர். இந்நிலையில் இன்று கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் தமிழக போலீசாரும் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.