இந்தியாவில் எங்கும் இப்படி நடக்கவில்லை.. புதிய சாதனை படைத்த கோவை வாக்காளர்கள்.. வெல்டன்!
லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் வாக்காளர்கள் மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் செய்து இருக்கிறார்கள்.
Recommended Video
கோயம்புத்தூர்: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் வாக்காளர்கள் மிகப்பெரிய சாதனை ஒன்றை சத்தமில்லாமல் செய்து இருக்கிறார்கள். இந்தியாவிலேயே இப்படி ஒரு சாதனை இந்தியா முழுக்க எங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வருகிறது. தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக வந்துள்ளது.
பெரும்பாலும் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்று, தனிக்கட்சியாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தல் முடிவுகளில் கோவையில் வித்தியாசமான சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது.
என்ன நடந்தது
கோவை தொகுதியில் திமுக கூட்டணியாக சிபிஐ வேட்பாளர், நடராஜன் முன்னிலை வகித்து வருகிறார். இவர் மொத்தம் 2.66 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 1.8 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். மொத்தம் 80 ஆயிரம் வாக்குகள் நடராஜன் முன்னிலை பெற்றுள்ளார்.
வேறு எங்கு
தமிழகம் இல்லாமல் நாடு முழுக்க மொத்தம் இரண்டு இடங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்னிலை வகிக்கிறது. அதில் கேரளாவில் ஆலப்புழா தொகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 4 சிபிஐ, சிபிஐ முன்னணியை சேர்த்து மொத்தம் 6 இடங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
கோவை எப்படி
இந்த நிலையில் கோவை எப்படி வித்தியாசப்படுகிறது என்றால், கோவையில் மட்டுமே கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் வலுவான பாஜக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற உள்ளார். இந்தியா முழுக்க பாஜக வலுவான இருக்கும் இடங்களில் கம்யூனிஸ்ட் எங்கும் வெற்றிபெறவில்லை. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் வலுவாக இருக்கும் ஒரு தொகுதியில் கூட எங்கும் கம்யூனிஸ்ட் வெற்றிபெற்றது இல்லை.
கோவை சாதனை
அதை கோவை முறியடித்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே கோவையில் மட்டும் நடராஜன்தான் பாஜக வேட்பாளர் ஒருவரை, அதுவும் வலுவான பாஜக வேட்பாளரை, பாஜக வலுவாக இருக்கும் தொகுதியில் தோல்வி அடைய செய்து இருக்கிறார். இது பலரும் எதிர்பார்க்காத முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடு முழுக்க இந்த தேர்தல் முடிவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.