பிறந்த நாளன்று 17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்.. குற்றவாளி மணிகண்டன் எங்கே.. தனிப்படை தீவிரம்
17 வயது சிறுமி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்
Recommended Video
கோவை: பிறந்த நாளன்று 17 வயது சிறுமியை சீரழித்த 6 பேர் கொண்ட கும்பலில்.. மிக முக்கியமான குற்றவாளியான மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் சிறுவர் பூங்கா உள்ளது.. இங்கு ஒரு காதல் ஜோடி போன 26ஆம் தேதி வந்துள்ளது. காதலி 11-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆவார்.. அன்று அவளுக்கு பிறந்த நாள்.. அதனால் தனிமையில் பேச பார்க்கிற்கு வந்துள்ளனர். அப்போது மணி ராத்திரி 9 ஆகும்.
புதர்கள் மண்டிய அந்த பூங்காவில் காதலன் காதலியை சீரழிக்க... அங்கு திடீரென வந்த காதலனின் நண்பர்கள் 6 பேர் அடுத்தடுத்து அந்த சிறுமியை சீரழித்தனர்.
இதில் 5 பேர் கைதாகி விட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியும், காதலனின் மிக நெருங்கிய நண்பனுமான மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். இவரையும், வீடியோ எடுத்த இன்னொரு நண்பர் கார்த்திக்கையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள மணிகண்டன் மீது ஏற்கனவே ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளனவாம்.. இவர் மீது கொலை வழக்கு கூட இருக்கிறதாம்.. ஆஜானுபாகுவான தோற்றத்தை உடையவர் மணிகண்டன். அதனால், இவர் போலீஸ் வேலைக்குகூட முயற்சி செய்து வந்தாராம்.. அதன்படி வேலையும் கிடைத்துள்ளது.
புதர் மண்டிய பூங்காவில்.. காதலியை சீரழித்த காதலன்.. அடுத்தடுத்து 6 பேர்.. கோவையை அதிர வைத்த சம்பவம்
ஆனால், வேலையில் சேருவதற்கு முன்பு, மணிகண்டனுக்கும் இன்னொரு நண்பனுக்கும் சண்டை வந்துள்ளது. அந்த சண்டையில் மணிகண்டனை நண்பன் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்ட.. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அந்த நண்பரை வெட்டி கொன்றே விட்டாராம்.. அதனால்தான் மணிகண்டனால் போலீஸாக முடியவில்லை என்கிறார்கள்.
ஏற்கனவே கொலை கேஸ் உள்ளது.. இப்போது போக்சோவும் சேர்ந்து கொண்டுள்ளது என்பதால், இனி ஒருபோதும் மணிகண்டன் போலீசாக வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இப்போது இந்த மணிகண்டனைதான் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.